செவ்வாய், 30 அக்டோபர், 2007

அனுசக்தி ஒப்பந்தம் சரியா தவறா?

தற்பொழுது இந்தியாவின் அன்னியச்செலாவணியின் இருப்பு எக்குத்தப்பாக உயன்ர்ந்துகொன்டே இருக்கின்றது. உலகெங்கும் உள்ள இந்தியர்கள் அந்நாட்டு பணங்களை (குறிப்பாக அமெரிக்கவிலிருந்து) அனுப்பிக்கொன்டேஐருக்கின்றார்கள். வெளிநாட்டு ப்பனம் வந்து குவிந்தவண்ணம் உள்ளது. அதையெல்லாம் மீன்டும் கைப்பற்ற என்ன வழிகள் உள்ளதோ அனைத்தையும் நரித்தனமாக செய்துகொன்டிருக்கின்றது அமெரிக்கா. அதில் ஒன்றுதான் அனுசக்தி ஒப்பந்தம், நமது இந்தியாவில் கிடைக்கும் மூலப்பொருட்க்களைக்கொன்டே அனுசக்தி தேவைகளை சமாளிக்கலாம், இல்லை ரஷ்யாவிடம் பெறலாம். இத்துனைகாலம் ஆஸ்திரேலியாவிடம் இருந்துதான் பெற்றுக்கொன்டிருந்தோம், அமெரிக்காவின் நரித்தனத்தால் தற்பொழுது ஆஸ்திரேலியா தரமறுக்கின்றது. மேலும் உலகெங்கும் அனுஉலைகளினால் பாதிக்கப்பட்ட நாடுகள் அனூலைகளை மூடியவண்ணம் உள்ளன, அமெரிக்காவின் அனு-உலை வியாபாரம் எங்கும் போனியாகவில்லை, இளிச்சவாய் நாடான இந்தியாமட்டும் பல்லிளித்துக்கொன்டு இருக்கின்றது. இந்த ஒப்பந்தம் மட்டும் அமலானால் தேவையில்லாமல் அளவுக்கதிகமாக பனம் அமெரிக்காவுக்கு கொடுக்கவேன்டியிருக்கும். அவர்களது தொழில் நுட்பத்தைமட்டும் விலைகொடுத்து வாங்கனும் வேறு யாரிடமோ பெற்றால், கடுமையான அபராதப்பணம் கட்டனும் மேலும் உதவிகளும் ரத்து செய்யப்படும்.
ஆயுதங்களுக்கு அனுசக்தியை பயன் படுத்தக்கூடாது பயன் படுத்தினால் கடுமையான அபராதப்பணம் கட்டனும் மேலும் உதவிகளும் ரத்து செய்யப்படும். பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளின் அச்சுறுத்துதலை தவிர்க்க அனு ஆயுத ஆராய்ச்சிப்பணிகள் அவசியம்.

உலகளாவில் இந்தியாவிலும் சீனாவிலும்தான் தற்போது வாங்கும் சக்தி அதிகமாக இருக்கின்றது. 30 வயதுக்குட்பட்டோர் 60% இருக்கின்றனர், மேலும் அபரிதமான அந்நியப்பனம் கையிருப்பாக இருக்கின்றன. அதை கபளிகரம் செய்ய கழுகுகளும் நரிகளும் வட்டம் போட்டுக்கொன்டே இருக்கின்றன.

வால்மார்ட் என்ற அமெரிக்க நிறுவனத்தை இந்தியாவைல் அனுமதிக்கும்படி நிர்ப்பந்தப்படுத்திக்கொன்டே இருக்கினறது. அது மட்டும் வந்தால் இந்தியாமுழுது கடை விரித்து பணத்தையெல்லாம் வாரிச்சுருட்டிக்கொன்டு அமெரிக்கவிற்கே திரும்பி வாரிச்சென்றுவிடுவர். இதுதான் கதை.

நமது இந்திய அரசாங்கமோ அபரிதமான அந்நியப்பணத்தை கையில் வைத்துக்கொன்டு நல்லதொரு நலத்திட்டங்களை செயற்ப்படுத்தாமல், பெரிய தொழிலதிபர்களுக்கும், வியாபாரிகளுக்கும் கடன் கொடுத்து அவர்களை மேலும் பணக்காரர்களாக்கும் வட்டித்தொழிலில்தான் கருத்தாய் இருக்கின்றது.

செவ்வாய், 23 அக்டோபர், 2007

அன்பு என்றால் என்ன?

நீ என்னைப்பார்த்து அன்பு என்றால் என்னவென்று கேட்டாய் அதை என்னால் சொல்லமுடியாது பிரிந்து இருந்து பார்த்தால்தான்தன் ஆழம் தெரியும் வெளிப்படையான அன்பு கூட நாம் இருக்கும் நாள் வரைதான். ஆனால் உன்மையான அன்பு என்பது ஏழு ஜென்மம் எடுத்தாலும் மறையாது. உன்னைப்பற்றி சாகும் சில மணி நேரத்துக்கு முன்னால் அறிந்துகொன்டேன். காலையில் நீ கூறிய வார்த்தைகள் எவ்வளவு வேதனை ஏற்ப்படுத்தியது தெரியுமா? அது உனக்கு எப்படி தெரியும் இவள் இல்லையென்றால் இன்னொருவள் என்று வாழ்ந்த உனக்கு அன்பு என்றால் என்னவென்று தெரியுமா? நீ இவ்வளவு நாள் கேவலமான எண்ணத்தோடு பேசிக்கொன்டிருக்கின்றாய் என்பதை தெரிந்துகொன்டேன். இவ்வளவு நாள் எதற்க்காக என்னிடம் பேசிக்கொன்டிருந்தாய் என்பதையும் புரிந்துகொன்டேன். நீ கூறிய வார்த்தைகள்னைத்தையும் இன்னொருத்தி உனக்கு கண்டிப்பக கூறுவாள். உண்மையான நன்பர்கள் எனக்கு கிடைக்க மாட்டார்கள் என்று சொன்னாய் ஆனால் எனக்கு பலபேர் கிடைத்தார்கள் உனக்குதான் அதற்கு கொடுத்து வைக்கல, எனக்கு எல்லா இடத்திலும் அன்பு கிடைத்தது. வயது கோளாறால் உன் அன்பை எதிர்பார்த்தேன். நீ இன்று கூறிய வார்த்தைகளால் பாதி உயிர் போனது உன்னை பார்க்கும்போதெல்லாம் மீதி உயிர் போய்க்கொன்டே இருக்கின்றது. உண்மை தெரியும்போது நீ கண்டிப்பாக வருத்தப்படுவாய். நான் இதுவரை வீட்டில் என் துனியைக்கூட துவைத்ததில்லை. ஆனால் தினம் தினம் உன் துணியை துவைத்தேன். அதை எல்லாம் நினைக்கும்போது மனம் எவ்வளவு வேதனை அடைகிறேன் தெரியுமா? உன்னிடம் வேறு ஏதாவது எதிர்பார்த்தேனா?.

இது என்ன என்று பார்க்கிறீர்களா? எதாவது சினிமா வசனமோ? இல்லை எதாவது ஒரு கதை புத்தகத்தின் ஒரு பகுதியோ? இல்லை நாடகத்தில் வரும் உரையாடலோ?

எதுவும் இல்லைங்க. ஒரு 17 வயது பள்ளி மாணவியினுடைய நாட்குறிப்பின் ஒரு பக்கம்தான் இது. தனது தோழியைப்பற்றி எழுதியிருக்கின்றார். எப்பேர்ப்பட்ட பக்குவமான மன நிலை தெரிகிறது பாருங்கள், பாவம் அன்புக்காக ஏங்கி தவித்து கிடைக்கமல் துயருற்று, கிடைத்ததும் பொய்யாய் போய் அதானால் உடைந்துபோன மனத்தில் சோகம் இழையோடுவது பட்டவர்த்தனமாக தெரிகின்றது.

பாவம் இந்த இளமொட்டு 17 வயதிலேயே கருகிவிட்டது. ஆமாம், 2007 அக்டோபர் மாதம் 23 ம் நாள், சோகத்தின் துயர் தாங்காமல், உன்மையான அன்பை உதாசீனப்படுத்திய இந்த கேவலமான உலகத்தில் இருக்கப்பிடிக்காமல் தனது வகுப்பறையிலே தூக்குமாட்டி இறந்துபோனார். காடலூர் புதுப்பளையம் பள்ளியைச்சேர்ந்தவர். இறப்பதற்கு முன்பு தனது தோழிகளுக்கும் பெற்றோர்களுக்கும் 53 பக்கங்களில் கடிதம் எழுதிவைத்து விட்டு இறந்து போயிருக்கின்றார். அதில் ஒருபகுதியைத்தான் "தமிழ் முரசு" மாலை நாளிதழில் வெளியிட்டு இருக்கின்றார்கள்.

அன்பு என்ற கண்ணுக்கு புலப்படாத வஸ்துவைப்படைத்த கடவுளை குறை சொல்லுவதா?
அன்புக்கு அடிமையாகும்படிக்கான பலகீனமான இதயத்தைக்கொன்ட மணிதனைக்குறை சொல்லுவதா?
உன்மையான அன்பை புரிந்துகொள்ளாமல் சுயநலமே பெரிதென்று செயற்ப்படும் உலகத்தை குறைசொல்லுவதா?