வியாழன், 11 டிசம்பர், 2008

துக்க‍‍-லக்-10

துக்க‍‍-லக் இங்கே இருக்கு
http://mustdeclare.blogspot.com/2008/12/10.html

திங்கள், 8 டிசம்பர், 2008

பிரிவினையை தூண்டும் இந்திய அரசு.

பிரிவினையை தூண்டும் இந்திய அரசு.

தமிழக அரசியல் தலைவர்கள் கோமாளிகள் அவர்கள் சொல்லுவதையெல்லாம் இந்திய அரசாங்கம் கேட்காது என்று இலங்கை இராணுவத் தளபதி சொல்லியுள்ளார். தமிழக சட்டமன்றத்தில் போர் நிறுத்தம் செய்யுமாறு தீர்மானம் நிறைவேற்ற்றப்பட்ட நிலையில் இவர் இப்படிச்சொல்லியிருப்பதை கன்டித்து இந்திய அரசாங்கம் எதுவும் சொல்லவில்லை. இது இவர் சொன்னது உன்மைதான் என்று இந்திய அரசாங்கமே ஒத்துக்கொள்வது போலத்தான் உள்ளது. ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கக்கூடியவர்கள்தான், தமிழ க அரசியல் வாதிகள், சட்ட மன்ற உறுப்பினர்ககள், அமைச்சர்கள், மற்றும் முதல்வர்.

இவர்கள் அனைவரும் கோமாளிகள்தான் இவர்கள் சொல்லுவதை செவிமடுத்தும் கேட்கமாட்டோம், இலங்கை அரசு சொல்லுவதைத்தான் கேட்போம் என்றால் என்ன அர்த்தம்?

ஒட்டுமொத்த தமிழ் உனர்வுகளைவிட சிங்கள மக்களின் உணர்வுகள்தான் இந்திய அரசுக்கு முக்கியம் என்ற்றல் என்ன அர்த்தம்?

பாக்கிஸ்தானிடம் சவால் விடுவோம், சீனாவை எச்சரிப்போம், ஆனால் இலங்கையிடம் மட்டும் மன்டிபோட்டு கேட்கும் உதவிகளையெல்லாம் செய்து கொடுப்போம் (தமிழர்களை அழிக்க) என்றால் என்ன அர்த்தம்?

தமிழர்களே நீங்கள் இந்தியாவில் ஒரு அங்கம் இல்லை, (ஒ)அழிந்துபோங்கள் என்றுதானே அர்த்தம்?

வியாழன், 4 டிசம்பர், 2008

துக்க‍‍-லக்-9

திங்கள், 1 டிசம்பர், 2008

துக்க‍‍-லக்-8

வியாழன், 20 நவம்பர், 2008

துக்க‍‍-லக்-7

புதன், 12 நவம்பர், 2008

துக்க‍‍-லக்-6

திங்கள், 10 நவம்பர், 2008

இல கனேசன் அவர்களுக்கு நன்றி

இந்தியாவின் தில்லுமுல்லு மோசடி பித்தலாட்டக்காரர்க‌ள், மோசடிக்காரர்களின் ஆபத்பாந்தவர்க‌ள், மோசடிக்காரர்களை காப்பாற்ற இந்தியமக்களின் வரிப்பனத்தை வாரியிறைப்பவர்க‌ள் ப.சிதம்பரம் மற்றும் மன்மோகன் சிங் இருவரும் ஆவார் .

இவர்கள் இருவரும் இந்திரா காங்கிரஸின் கரையான்கள் ஆவார் . தமிழர்கள் இலங்கையில் அழிக்கப்படுவதை கொஞ்சம் கூட கன்டுகொள்ளாமல் தமிழர்களை அழிப்பவர்களுக்கு பொன்னும் பொருளும் கொடுத்து ஊக்குவித்துக்கொன்டிருக்கின்றார்கள். விடுதலைப்புலிகளை அழிக்கத்துடிக்கும் இளங்கோவன் தங்கபாலுக்களை கொன்ட இந்திரா காங்கிரஸுடன் ஒட்டிக்கொன்டிருந்தால் கலைஞருக்கு அவப்பெயர்தான்.

இல‍கனேசன் அவர்கள் பாஜக ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் தமிழர்களின் நலம் உறுதிசெய்யப்படும் என்று சொன்னது கவனிக்கத்தக்கது. அப்படி உறுதிகொடுத்தால், பாஜகவை தமிழ்நாடு கன்டிப்பாக உச்சானிக்கொம்பிலேஏற்றிவைப்பர். தமிழர்கள் தங்கள் உயிருள்ளவரை பாஜக வை மறக்கமாட்டார்கள். அதுக்கு நான் மனப்பூர்வமாக ஆதரவு கொடுப்பேன்.

வியாழன், 6 நவம்பர், 2008

துக்க‍‍-லக்-5



வியாழன், 30 அக்டோபர், 2008

துக்க‍‍-லக்-4


வியாழன், 23 அக்டோபர், 2008

ஈழம் குறித்த கருத்துக்கள்

தூயாவின் இந்த பதிவில் ஈழத்தைப்பற்றிய கருத்து வினாக்களை கன்டேன், அழைக்காமலேயே எனது கருத்தை சொல்ல ஆசைப்பட்டு சொல்லியிருக்கின்றேன்.


1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?

கடின உழைப்பால், பண்பால் உயர்ந்த இலங்கைத்தமிழர்கள் வாழும் கலைபற்றி தமிழநாட்டு தமிழர்களுக்கு சொல்லிக்கொடுத்தனர். இலங்கைத்தமிழ் வானொலிக்கு தமிழகமே அடிமைப்பட்டுக்கிடந்தது. அதில் வரும் விளம்பரங்களைப்பார்த்தாலே தெரியும் தமிழர்கள் எப்படி ஒரு கட்டுப்பாடான செழிப்பான வியாபாரத்துடன் செழுமையான வாழ்வை வாழ்ந்துகொன்டிருந்தார்கள் என்று.
கடின உழைப்பை கடின உழைப்பால் வெல்லமுடியாத சிங்களர்கள் பேடித்தனமாக அடக்குமுறை, ஒடுக்குமுறை, இடைக்குடியேற்றம் என்று என்னனேனவோ செய்தும் தமிழர்களின் முன்னேற்றத்தினை தடுக்கமுடியலை. முடிவாக கொலைவெறித்தனத்தினை ஆரம்பித்தனர்,.ஒடுக்கப்பட்ட‌ தமிழர்கள் விடுதலைவேன்டி தங்களுக்குளேயே கட்டுப்பாடு கொன்டு தலைவர் பிரபாகரனின் வ்ழிகாட்டலில் மீன்டும் ஒரு கட்டான வாழ்கை அடைந்தபோது அதைப்பொறுக்காத சிங்களர்கள் மீன்டும் கொலைவெறித்தாக்குதல் ஆரம்பித்து இருக்கின்றார். கொலைவெறித்தாக்குதலை தற்காத்தால் அதை தீவிரவாதம் என்று சொல்லுகின்றனர். என்னற்ற தமிழ் உறவுகள் கொல்லப்படுவதை ப்பார்த்து தமிழர்கள் தவிற மற்ற எல்லாரும் இந்த உலகத்தில் சந்தோசப்படுகின்றனர். எங்காவது மனிதாபிமானம் இருக்காதா என்று தமிழர்கள் ஏங்கி ஏங்கி ஏமாந்துகொன்டே இருக்கின்றனர்.


2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?

எனது இதையப்பூர்வமான ஆதரவு உன்டு. தமிழர்களின் கட்டுகோப்பான வாழ்வுக்கு இடையூறு செய்யாமல் இருந்தாலே போதும், இலங்கையை சிங்கப்பூரைவிட மிக உயர்ந்த உலகத்தின் வியாபார மற்றும் சந்தை இடமாக்கி வளம் கொழிக்கச்செய்துவிடுவர்.

3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?

ஈழத்து ச்செய்திகளை நெருடல் மற்றும் புதினம் தளத்தில் மற்றும் கூகிள் தேடுதல் வாயிலாக வலைப்பதிவுகளில் படிப்பேன்.


4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?


மிகவும் சந்தோசமாக இருக்கு, நல்ல ஒரு நிகழ்வு ஆரம்பமாகி யிருக்கின்றது. இதன்மூலம் உலகத்தோரின் கவனத்துக்கு இதை கொன்டு செல்வதை நன்கு பயன் படுத்திக்கொள்ளனும்.


5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?
தனி நாடு என்பது சாத்தியாமா என்று எனக்கு தெரியலை.
கவலைப்படாதீர்கள் எமது தாய் உறவுகளே. உங்கள் இன்னகல் கேட்டு நாங்கள் மிகுந்த வேதனைகள் கொன்டுள்ளோம். கஷ்டங்கள் நீங்கி மீன்டும் சந்தோஷமான வாழ்கை துவங்கும் காலம் மிக அருகில் தான் உள்ளது. இன்னல்களை கொஞ்சம் தாங்கிக்கொள்ளூங்கள். நாங்கள் இருக்கும் வரை நீங்கள் கவலையே படாதீர்கள். சொந்தநாட்டில் இருப்பதுதான் சுகம் என்ற‌றிவேன், உங்கள் சொந்தநாட்டிலேயே உங்களுக்கு நல்ல காலம் நமது தலைவர் பிரபாகரன் மூலம் கிடைக்கும் நாள் அருகில்தான் உள்ளது. இருந்தாலும் சொல்லுகிறேன், நீங்கள் தமிழ்நாட்டுக்கு வாருங்கள் தாய்வீடு உங்களை அன்புடன் இங்கே வாழவைக்கும்

==================================================================
தளபதி கெர்னல் பானு அவர்களின் பேட்டியை குமுதத்தில் படித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. நீங்களும் படிக்கும் வன்னன் கீழே தந்துள்ளேன்.

விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவராக இருப்பவர் கேனல் பானு. புலிகளுக்காகப் பல களங்களைக் கண்டு, வெற்றிகளைக் குவித்தவர்.

இலங்கை ராணுவம், புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சி-யைப் பிடிக்க இப்போது இடையூறாக நின்று கொண்டிருப்பவர் தளபதி பானு. ஈழப்போர் முனையில் இருந்த அவரை மிகுந்த சிரமத்திற்குப் பின் நாம் பேட்டி கண்டோம். தமிழக இதழ் ஒன்றுக்கு அவர் அளிக்கும் முதல் பேட்டி இதுவே.

இலங்கைப் போரில் புலிகள் பின்-வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையா?

``நாங்கள் கூறினால் நம்பவா போகிறீர்கள்? பன்னாட்டு ஊடகவிய-லாளர்கள் எல்லாம் இங்கே வந்து பார்க்கட்டுமே. பார்த்தால் உண்மை தெரியும். இன்று வரை இலங்கை ராணுவம் எங்கள்மேல் போர் தொடுக்கவில்லை. அப்பாவி தமிழ்மக்கள் மீதுதான் தாக்குதல் நடாத்துகிறார்கள். சில இடங்களில் நாங்கள் தடுப்பு நடவடிக்கையில் இறங்குகிறோம். அவர்கள் பின்வாங்கி ஓடுகிறார்கள். இங்கே பாரிய (பெரிய) யுத்தம் நடப்பதாகக் கூறும் அவர்கள் வரைபடத்தை வைத்து அதை உறுதி செய்யட்டுமே.!''

தமிழ் மக்களை தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருமாறு இலங்கை அரசு அழைக்கிறதே? அதை தமிழ் மக்கள் ஏற்கிறார்களா?

``அப்படிப் போகத் துணியாமல்தான் அவர்கள் இங்கே அகதிகளாக இருக்கிறார்கள். ஏற்கெனவே மட்டக்களப்பு, அம்பாறை, திரிகோணமலை பகுதிகளில் ராணுவத்தை நம்பிச் சென்றவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியாதவர்களா நம் மக்கள்? அங்கே ராணுவச் சித்திரவதை தொடர்கிறது. ஒட்டுப்படைகள் (ராணுவத்துக்கு ஆதரவாக இயங்கும் தமிழ்க்குழுக்கள்) கையில் துவக்குகளோடு ஆள் கடத்தல், அழித்தொழிப்பு வேலைகளை ராணுவத்துடன் சேர்ந்து செய்கிறார்கள்.

அதனால்தான் வீடின்றி, உணவு, மருந்து கிடைக்காத நிலையிலும் தமிழ் மக்கள் கிளிநொச்சி நோக்கி நகர்கிறார்கள். அந்த மூன்றே முக்கால் லட்சம் மக்களும் யார்? 22 ஆயிரம் போராளிகளைப் பலி கொடுத்துள்ள குடும்பத்தினர்தானே? அதில் இருப்பது என் தாய், தந்தை, பிள்ளை, மாமன், மைத்துனன் தானே? அவர்கள் எப்படி அறுத்துக்கொண்டு போவார்கள்? அதனால்தான் இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியிலும் அவர்கள் இங்கேயே நிற்கிறார்கள்.''

`பிரபாகரன் சரணடைய வேண்டும். தன்னையும் இயக்கத்தவர்களையும் அவர் காப்பாற்றிக் கொள்ள இதுதான் கடைசி வாய்ப்பு' என்று மகிந்த ராஜபக்சே பேசியிருக்கிறாரே?

``இதைக் கேட்டு நாங்களும், எங்கட மக்களும் மட்டுமல்ல. சிங்கள ராணுவமே கூட சிரித்துக் கதைக்கிறது. ஒவ்வொரு அதிபருமே இப்படித்தான். பதவிக்கு வந்த மூன்றாண்டுகளுக்குள் பாரிய யுத்தம் ஒன்றை நடத்துவார்கள். அடிவாங்கி ஓடுவார்கள். தேர்தல் நெருங்கினால் `சமரசப் பேச்சு வார்த்தை, சமரசத் தீர்வு' என்பார்கள். தேர்தலில் வென்றால் மீண்டும் மூன்றாண்டுகளுக்கு சண்டை பிடிப்பார்கள். வாக்களித்த மக்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமே, அதற்காகத்தான் `இதோ நெருங்கிட்டோம். பிடிச்சிட்டோம். சரணடைங்க' என்கிறார்கள்.''

புலிகளை முற்றாக அழித்தொழிக்காமல் ஓயப் போவதில்லை. புலிகளின் நாட்கள் எண்ணப்-படுகின்றன என்கிறார்களே சிலர்?

``நாங்களே நினைத்தாலும் இனி இந்த இயக்கத்தை அழிக்க முடியாது. `சரி போதும்' என்று நாங்களே முடிவெடுத்தாலும் இனிமேல் இந்த இயக்கம் இலக்கை அடையாமல் ஓயாது. கரும்புலிகளின் எண்ணிக்கை நாளாந்தம் கூடுமே தவிர குறையாது. எமது இயக்கத்தின் பலம் ஆயுதமல்ல. மனஉறுதியும், உலகம் முழுவதும் வியாபித்துள்ள எங்கள் தமிழ் உறவுகளும்தான். அதனால் ராஜபக்சே அப்படிக் கதைக்கிறார் என்றால், அவர் கடைசிவரை கதைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.''

அமெரிக்கா, சீனா, கொரியா, இந்தியா போன்ற நாடுகளிடம் இருந்து பெருமளவில் இலங்கை அரசு ஆயுதம் வாங்கிக் குவிக்கிறதே? அதைச் சமாளிக்கும் அளவுக்கு உங்களிடம் ஆயுத பலம் இருக்கிறதா?

(சிரிக்கிறார்) ``அதுபற்றி எங்களுக்கு என்ன கவலை? அவர்கள்தான் பிரேமதாசா காலத்திலிருந்தே வெளிநாட்டில் இருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்கிறார்களே? அவர்கள் கஷ்டப்பட்டு வாங்கி பாதுகாப்பாகக் கொண்டு வந்து கடைசியில் எங்கட காலடியில் போட்டுவிட்டுத்தானே ஓடுவார்கள்? எங்களுக்கு எப்போதும் ஆயுதம் வாங்க வேண்டிய அவசியம் வந்ததே இல்லை. அவர்களது ஆயுதத்தைப் பிடுங்கித்தான் அவர்களை அடிக்கிறோம்.

ஆனையிறவு சண்டையில் அவர்களிடம் இருந்து 152 மி.மீ. ஆட்லரி பீரங்கியைப் பிடுங்கினோம். பிறகு 122 மி.மீ. பீரங்கி. அவற்றை வைத்துத்தான் அவர்களை அடிக்கிறோம். ஒவ்வொரு பீரங்கிக்கும் இதுவரை இரண்டாயிரம் பேர்வரை மடிந்திருப்பான்கள். இப்படிப் பறித்த ஆயுதம் நிறைய இருக்கிறது. வரட்டும் பார்க்கலாம்.''

தடுப்பு நடவடிக்கை முடிந்து எப்போது தான் நீங்கள் சண்டை பிடிப்பீர்கள்?

``சிங்கள ராணுவத்தின் கை ஓங்கி விட்டது என்பது பொய்ப்பிரசாரம். நாங்கள் தகுந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறோம். எங்கட தரப்பில் ஆயிரம் குண்டுகள் செலவானால் அவர்களிடமிருந்த பத்தாயிரம் குண்டுகளை நாங்கள் பறிக்க வேண்டும்.

இப்போது மழைக்காலத்துக்காகக் காத்திருக்கிறோம். பலத்த மழையில் அவர்களை அடித்தால்தான் சரிப்படும். தப்பி ஓடமுடியாமல் தண்ணீரில் விழுந்து அவர்கள் சாக வேணும். அதற்காகத்தான் காத்திருக்கிறோம். எவ்வளவு மழை வெள்ளம் எண்டாலும் நாங்கள் களத்தில் நிற்போம். எங்கள் பயிற்சி அப்படி.''

கடந்த ஒரு மாதத்தில் `கொத்துக் கொத்தாகப் புலிகள் பலி' என்ற செய்திகள்....?

``உண்மை ராஜபக்சேவுக்கே தெரியும். எங்கட தரப்பு வீரச்சாவுகளை நாங்கள் மறைக்க மாட்டோம். அவர்கள் கூறும் கணக்குப்படி பார்த்தால் எங்கள் ஒட்டுமொத்த எண்ணிக்கையையே தாண்டிவிடும் போலிருக்கிறது. ம். வேடிக்கைதான்.... ஸீ

புதன், 22 அக்டோபர், 2008

துக்க‍‍-லக்-3

வியாழன், 16 அக்டோபர், 2008

பங்கு

பங்கு
மிகப்பெரிய அளவினதாக இருக்கும் ஒரு நிறுவனத்தின் முதலீட்டினை ஒருவரே திரட்டமுடியாத பட்சத்தில் மற்றவர்களும் பகிர்ந்துகொள்ளும் முறையில் ஒவ்வொருவரும் கிடைக்கப்பெறும் பகிர்மானம்தான் பங்கு. எடுத்துக்காட்டாக நானூறு கோடி ருபாய் தேவையான ஒரு நிறுவன முதலின் பங்குகள் ஒன்றின் விலை 100 ரூபாய் என்ற அளவில் நாலு கோடிப்பங்குகள் வெளியிடப்படும். இதை வாங்குபவர்கள் அவற்றின் அளவுக்கேற்ப்ப லாபத்தில் பங்குபெறுவர். ஒருவர் ஆயிரம் பங்குகள் வாங்கவேன்டுமென்றால் (1000 x 100 = 100000) ஒரு லட்ச ரூபாய் கொடுக்கவேன்டும். இப்படி வாங்கப்பட்ட பங்குகளை ஒருவர் மெற்றவருக்கு விற்கலாம், மற்றவர் பெயருக்கு மாற்றித்தரலாம்.

பங்கு வர்த்தகம்:
ஒருவர் தன்னிடம் உள்ள பங்குகளை அவசரப்பனத்தேவைக்காக விற்கவேன்டும் என்ன செய்வது? யாரிடம் போய் விற்பது?.
அதுபோல ஒருவர் தன்னிடம் உள்ள உபரிப்பனத்தை ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்குவதன்மூலம் முதலீடு செய்ய நினைக்கிறார். யார்டம் போய் அந்த பங்குகளை வாங்குவார்?.
இங்குதான் பங்கு வர்த்தகம் வருகின்றது. ஒரு பங்கு வணிகர் ஆனவர் பங்குகளை விற்க விரும்புவர்களிடம் இருந்து பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கி வைத்திருப்பார். வாங்க விரும்பும் மற்றவரிடம் அதை சிறிது அதிக விலைக்கு விற்பார்.

நம்ம ஊரில் பழைய இரும்பு ச்சாமான் கடைகள் இருக்கும் அதில் உபயோகம் இல்லாமல் இருக்கும் இரும்புப்பொருட்களை ஒரு சிலர் வந்து விற்ப்பர். அதேபோல பழைய இரும்புக்கடைகளில் உள்ள பொருட்களை வாங்குவதற்கும் ஒருசிலர் அந்த கடைக்கு வந்து வாங்கிச்செல்வர்.

பங்குவணிகமும் அதேபோலத்தான் சாதாரனமான பொருள் வியாபாரம் போன்றதுதான்.

இதில் என்ன வந்துச்சு இதில் அப்படி என்ன இருக்குன்னு எழுத வந்துட்ட ன்னு கேக்குரீங்களா?
இருங்க விஷயத்துக்கு வர்ரேன்.

உழைக்காமல் பிழைக்க நினைக்கும் ஒருசிலரால் இந்த பங்குவணிகம் கேவலாமக போய்க்கொன்டு இருக்கின்றது.
பங்கு வணிகத்தில் ஈடுபடுபவர்கள் தங்களிடம் இருக்கும் பங்குகளை விற்றுக்கொன்டே இருக்கவேன்டும் மறுபுறம் வாங்கிக்கொன்டே இருக்கவேன்டும். அப்பொழுதான் அவர் பங்கு வணிகர் ஆவார். மாறாக அவர் வாங்கிய பங்குகளை விற்காமல் தன்வசமே வைத்திருப்பாரேயானால் அவர் ஒரு முதலீட்டாளர் ஆவார், வணிகர் அல்ல. முதலீட்டாளர் தன்னிடம் உள்ள பங்குகளை உடனே விற்கமாட்டார் நீன்டகாலத்துக்கு வைத்திருப்பார் எனவே மிக நல்ல லாபம் இட்டும், மற்றும் நன்மதிப்பைகொன்டுள்ள கம்பெனியின் பங்குகளைமட்டுமே வைத்திருப்பார். ஆனால் வணிகர் நிறைய லாபம் சம்பாதிக்கும் நோக்கில் பங்குகளை வாங்கி மற்றும் விற்றுக்கொன்டே இருப்பார். நல்ல லாபகரமாக இயங்கிக்கொன்டிருக்கும் கம்பெனியின் பங்குகள் பெரும்பாலும் முதலீட்டாளர்களே வைத்திருப்பர், வணிகத்துக்கு வராது அப்படியே வந்தாலும் அதிக விலை கொடுக்க வேன்டியிருக்கும். சரி என்னடா இது துக்கடா கம்பெனிகளின் பங்குகளின் மூலம் அதிகம் சம்பாதிக்க முடியலை என்னபன்னலாம்ன்னு ஒருசில ஹர்ஷத் மேத்தாக்கள் யோசிச்சபோது பளிச்சுன்னு ஒரு ஐடியா அவர்களுக்குள் வந்தது. சரி கம்பெனிகளின் நன்மதிப்பு, நம்பகத்த்ன்மை மற்றும் லாபத்தன்மைதானே ஒரு கம்பெனியின் பங்கு விலையை நிர்னய‌ம் செய்கிறது அந்த சித்தாந்தத்தையே மாற்றுவோம் என்று சபதம்செய்து. பங்கு விலை நிர்னயம் செய்யும் காரணியையே மாற்றிவிட்டார்கள்.

வேன்டுமென்றே துக்கடா சாஃப்ட்வேர் கம்பெனிகளின் பங்குகளை அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். என்னடா லபமே ஈட்டாத உப்புமா கம்பெனியின் பங்கு இப்படி விக்குதேன்னு மற்றவர்கள் முழிச்சுகிட்டு இருக்குறப்ப. இப்பெல்லாம் சாஃப்ட்வேர் கம்பனிகளின் பங்குக்கு மதிப்பு அதிகம். அமெரிக்காவுல இருக்குற கம்பெனிகள் திடீர்னு இந்திய சாஃப்ட்வேர் கம்பெனிகளை வாங்குது, எப்ப விலைகூடும்ன்னு யாருக்குமே தெரியலை. அப்புடீன்னு மனச்சலவைசெய்யப்படுகிறார்கள். இதை ஆராய்ச்சி செய்து ஒன்னுத்துக்கும் ஆகாத கம்பெனியின் பங்குகளை வாங்கிய ஒருவர் கோடிகளை அள்ளிவிட்டார் என்ற செய்திகளும் இந்த தீயில் பெட்ரோல் ஊற்றுகின்றன. பைசாப்பெறாத கம்பெனிகளின் பங்குகளின் விலைகள் உச்சத்தில் போகின்றன.

வணிகர்கள் வாங்கிய பங்குகளை உடனே விற்றுவிடனும் அப்பதான் அவர்கள் பங்குவணிகர்கள் இல்லையேல் அவர்கள் முதலீட்டாளர்கள் என்று சொல்லியிருக்கின்றேன். எனவே அவர்கள் அதை விற்க்கவேன்டும் வாங்கிய விலைக்கே மற்றும் நட்டத்துக்கு விற்க்கமாட்டார்கள் லாபத்துக்குத்தான் விற்ப்பார்கள். அதைவாங்கியவர்களும் லாபத்துக்குத்தான் விற்ப்பர்கள். இப்படியே பங்கின் விலை கூடிக்கொன்டே செல்கிறது புதிது புதிதாக நிறுவனங்கள் பங்குகளை புழக்கத்தில் விட்டுக்கொன்டே இருக்கின்றன.

நன்றாக கவனியுங்கள் அவர்கள் வாங்குவது விற்பது எல்லாம் உணரக்கூடிய பொருளை அல்ல, உணரமுடியாத பங்கு என்ற வஸ்துவை. இப்படியே நன்றாக வணிகம் நடைபெறுகின்றது. கம்பெனிகளின் ஸ்திரத்தன்மை, லாபத்தன்மை, மற்றும் நம்பகத்த்ன்மைதான் ஒரு பங்கின் விலையை நிர்னயித்தகாலம் மலையேறி, வெறும் ஊகங்கள், வதந்திகள், மற்றும் விளம்ப்பரங்களே ஒரு நிறுவனப்பங்குகளின் விலையை நினயம் செய்யும் காலமாகிவிட்டது இந்த காலம். பங்குவணிகத்தில் புரளும் பணத்தின் அளவு கூடிக்கொன்டே செல்கிறது. மென்பொருள் பொறியாளர்களின் தயவால் உலகெங்கிலுமிருந்து அந்நியதேசத்து பனம் கொட்டோகொட்டு என்று கொட்டுகிறது இந்தியாவில். எனவே பணப்புழக்கமும் தாராளமாக இருக்கு இதில். அதில் ஈடுபடுபவர்கள் எல்லாம் பூரித்து பொங்கிப்போயிருக்கிறார்கள். இந்த அதிசயத்தில் கவர்ந்திழுக்கப்பட்டு சர்வதேச வியாபாரிகளும் இந்திய பங்குவனிகத்தில் உள்ளே வருகிறார்கள், அந்நியப்பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது இந்தியாவில். அதை அள்ளுவதற்க்காக அமெரிக்கா வங்கிவனிகத்தில், சில்லரை வர்த்தகத்தில் காப்பீட்டு துறையில் நுழைய அனுமதி கேட்டு செப்படி வித்தைகள் எல்லாம் செய்து வருகிறது. அனுசக்தி ஒப்பந்தம் செய்கிறது, ஒப்பந்தத்துக்கு மறுக்கும் மற்றநாடுகளிடம் எல்லாம் சென்று இந்த்தியாவுக்கக மன்றாடுகிறது. இபபடி ஒரு மாய வணிகம் சூதாட்டம் போல நடைபெற்றுக்கொன்டிருக்கின்றது இந்தியாவில். பங்குகளின் விலை உச்சத்தால் அதைக்கொன்டுள்ளோர் உஅலக பணக்காரர் ஆகிறார்கள். நம்ம அம்பானி பில்கேட்ஸை விட பணக்காரரானது இந்த விதத்தில்தான். பில்கேட்ஸ் பாவம் முக்கி முக்கி சம்பாதித்து வருவாய் அடிப்படையில் பணக்காரன் என்ற பெயரை பெற்றார். ஆனால் அம்பானியோ பங்கு என்ற ஏமாற்று தந்திரத்தின் மூலம் அதிக சொத்துள்ள பணக்காரன் என்ற பெயரை பெற்றார். இப்ப இருக்குற நிலமைல எந்த இடத்துல இருக்காருன்னு தெரியல.

100 ரூபாய் பங்கானது 30 பேர் கை மாறிய பிறகு 600 என்ற விலையில் இருக்கும் என்று வைத்துக்கொள்வோம். 30 வது நபர் அதை 610 க்கு விற்ப்பார். 31 வது நபர் 630க்கு விற்கிறார் என்று வைத்துக்கொள்வோம். சரி வாங்குபவர்கள் எல்லோரும் லாபத்துக்கே விற்றுக்கொன்டிருந்தால் அதன் முடிவுதான் என்ன?

நம்ம ஊரில் சங்கிலி சந்தை என்ற ஒரு உத்தியின் மூலம் மக்கள் ஏமாற்றப்படுவதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஒருவர் ஆயிரம் ரூபாய் கட்டினார் அவருக்கு நான்கு விண்ணப்பங்கள் கிடைக்கும். அந்த ஆயிரம் ரூபாயை நடத்தும் றுவனத்துக்கு 250, அதை விற்றவருக்கு 250, அதை விற்றவருக்கு விற்றவருக்கு 200 அதுக்கும் மேலானவ்ருக்கு 50 என்று என்று பிரித்து அனுப்பனும். அப்படி செய்தால் கிடைக்கும் 4 விண்ணப்பங்களை நாலுபேரிடம் ஒவொன்றும் ஆயிரம் ரூபாய்க்கு விற்கனும். இதன்மூலம் செலவழித்த 1000 ரூபாய் உடனே கிடைக்கும். அதை வாங்கியவர்கள் மற்றவர்களுக்கு விற்கையில் ஒரு 800 ரூபாய் கிடைக்கும் என்று சொல்லி சந்தைப்படுத்துவார்கள். இதில் எந்த ஒரு வனிகமும் நடைபெறவில்லை எந்த பண்டமும் மாற்றுப்பெறவில்லை. வெறுமெனே பணம் மட்டும் பரிவர்த்தனையாகிறது. ஒருவரிடம் இருக்கும் பணம் மற்றவருக்கு அனுப்பப்படுகிறது. மக்கள் பனமே மக்களுக்கு செல்கிறது. மக்களும் சரி என்னாஅகுதுன்னு பாப்போம் 1000 ரூபாய்தானே ந்னு நினைச்சு செய்யுறாங்க. அதை நடத்தும் நிறுவனத்துக்கு கொள்ளை லாபம், விற்கும் ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் 250 ரூபாய் கிடைக்கிறது. ஒருகட்டத்தில் 1000 செலவழிக்கத்தயாராக இருக்கும் அனைவரும் ஏமாற்றப்பட்ட நிலையில் யாருமே கட்டாமல் விடுகையில் இந்த சங்கிலித்தொடரானது அறுந்த்து முடிவுக்கு வரும். இதில் ஈடுபட்ட ஒவ்வொருவரின் தலைக்கும் 250 ரூபாய் என்ற வீதத்தில் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும்.

இதுதான் இப்ப நடந்துகொன்டிருக்கின்றது பங்கு வனிகத்தில். பங்குகள் வாங்கு வங்குன்னு வாங்க‌ப்பட்டு வீங்கிபோயி இருக்கு. ஒருகட்டத்தில் யாருமே வாங்கமுடியாமல் போகவே, பர பரன்னு தகவல்கள் பரவுகிறது. என்ன இந்த பங்கையே வாங்க ஆளில்லையே எப்படி நம்பி மற்ற பங்குகளை வாங்குவதுன்னு யோசித்து தயக்கம் காட்டுகிறார்கள். இது சங்கிலித்தொடர்போல பரவுகிறது. வனிகம் தடைபடுகிறது. விலை உயரும்ம்னு நினைத்து கன்னபின்னானு வாங்கி வைத்தவர்கள் எல்லாம் கலக்கம் கொள்ளுகிறார்கள். இதில் முதலீடு செய்தவர்கள் எல்லாம் விலகிக்கொள்ளுகிறார்கள்.
பங்குச்சந்தையில் பலத்த அடின்னு செய்திகள் வருகின்றன.

டாட்டாக்களும், பிர்லாக்களும், அம்ப்பானிகளும் பணக்காரர்களாக இருக்கனும். மேலும் லாப நிச்ச்யமற்ற இந்த சூதாட்டத்தினை ஊக்குவிக்கனும் அதுக்காக பணக்காரர்களின் ஆபத்பாந்தவன்களான சிதம்பரமும், மன்மோகன் சிங்கும் பெரும்பாடு பட்டுக்கொன்டு இருக்கின்றார்கள். சந்தை சரிந்து விழும்பொழுதெல்லாம் அதுக்கு முட்டுக்கொடுக்கும் விதமாக அறிக்கைகள் வருகின்றன. "யாரும் பயப்படவேன்டாம், நமது நிதி அமைப்பு பலமாக இருக்குது எனவே தயங்காதீர்கள் பங்குகளை வாங்கிக்குவியுங்கள்" என்று கூவு கூவுன்னு கூவி உதவுகிறார்கள். மேலும் இதில் நல்ல பணம் புழங்கவேன்டும் என்பதற்காக ரிசர்வ்‍வங்கியிலிருந்து நிதியையும் விடுவிக்கின்றார்கள். எத்துனை ஒட்டுப்போட்டாலும் டவுசர் கிழிந்துகொன்டுதான் இருக்கிறது,

விவசாயிகள், அன்றாடம் காய்ச்சிகள், கீழ் நடுத்தர வர்க்கத்தினருக்கு நாமம் தான் போடுகிறார்கள்.

புதன், 15 அக்டோபர், 2008

துக்க‍‍-லக்-2

வெள்ளி, 10 அக்டோபர், 2008

துக்க‍‍-லக்-1

திங்கள், 6 அக்டோபர், 2008

மனச்சிக்கல்

உயர்வு மனச்சிக்கல் (Superiority complex)

உயர்வு மனச்சிக்கல் என்பது தாழ்வு மனோபாவத்தில் இருப்போர்களால் அத்தாழ்வு மனோபாவத்தை மறைக்க அல்லது அதிலிருந்து தப்பிக்க அவர்களையறியாமலே உன்டாக்கிக்கொள்வது என்று மனவியல் வல்லுனர்கள் சொல்லுகிறார்கள்.

http://en.wikipedia.org/wiki/Superiority_complex


வலைப்பதிவுலகில் நாந்தான் பெரியவன், என் சாதிதான் பெரியதுன்னு சொல்லுவதில் அப்படி என்ன ஆனந்தமோ ஒருசிலருக்கு.
மற்றவர்களெல்லாம் விட நான் பிறப்பால், ஆற்றலால் உயர்ந்தவன் என்று சொல்லுவதில் அவர்களின் மனநோய்தான் தெரிகிறது. மற்றவர்கள் எல்லாம் நம்மை விட உயர்ந்துகொன்டுஇருக்கும்போது நமது மனத்துள் இருக்கும் சஞ்சலத்தை விரட்டியடிக்க அல்லது நான் அப்படி இல்லை என்று அவர்களை அவர்களேஏ ஏமாற்றிக்கொள்ள, அவர்களையறியாமலே இப்படியெல்லாம் சொல்லிக்கொள்வர்.

இப்படி அவர்கள் சொல்லிக்கொள்ளுவது, நான் உயர்ந்த இடத்தில் இருக்கின்றேன் என்ற‌ சுயஊக்கத்துக்கு வேன்டுமானால் பயன்படலாம்.

ஆனால் மற்றோருக்கு முன்னால் அப்படி சொல்லும்போது மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள் என்று சொல்லுவது போலத்தான் ஆகும். இதனால் சமூகத்தில் அவர்களது நற்ப்பண்புகள்தான் சிதையும். அதுக்கெல்லாம் கவலையில்லை என்று சொல்லுவதுதான் அந்த மனவியாதியின் உச்சம்.

பார்ப்பன ஜாதியில் பிறந்த ஒருவரின் பிறப்பைபற்றிய பெருமிதத்தைப்பாருங்களேன்.
பார்ப்பனன் என்று சொன்னால் விரட்டுகிறார்களாம், அதையெல்லாம் மீறி நான் பார்ப்பனன் என்று சொல்லி வீரமாக இருக்கிறாராம் அவர்.

http://dondu.blogspot.com/2006/03/blog-post_17.html


அடுத்தது.

வலைப்பதிவர் ஒருவர், எழுத்தாள‌ர் ஒருவரை வலைப்பதிவர் சந்திப்புக்கு அழைத்திருக்கிறார். உடனே அந்த எழுத்தாளர் கொதித்து எழுந்துவிட்டார். அதெப்படி என்னை yaahoo messenger வழியாக அழைக்கலாம்? நான் என்ன அவ்வுளவு கேவலமானவனா?

அழைத்தவர் லக்கிலுக்
அழைக்கப்பட்ட எழுத்தாளர் : சாரு நிவேதிதா

சாரு நிவேதிதா கொதிப்பு: http://charuonline.com/oct08/Rajinikanth.html

லக்கி லுக்கின் தன்விளக்கம்: http://www.luckylookonline.com/2008/10/blog-post_06.html

எனக்கு இங்கும் சாருநிவேதிதாவிடம் உயர்வு மனச்சிக்கல்தான் தெரிகிறது. அபார உயர்வு மனச்சிக்கல் தான்.
சாரு நிவேதாவுக்கு ஒரு சில கேள்விகள்.

1). அரட்டைப் பெட்டியில் கடவுளே வந்து முகமன் கூறினாலும் நான் கண்டு கொள்ள மாட்டேன்.

அப்புறம் ஏன் அரட்டைப்பெட்டியை உங்கள் கணணியில் வைத்திருக்கீர்கள்? கடவுளையும் கன்டுக்கத நீங்கள் லக்கியை கன்டுகொன்டதால் லக்கி அவர்கள் கடவுளுக்கும் மேலே அதையும் தான்டி புனிதமானவர் என்று நினைத்ததாலா?

2). யெஸ், டெல் மீஎன்று சொல்லித் தொலைத்து விட்டேன். அதன் பலன் கை மேல் கிடைத்தது.
கூட்டத்துக்கு அழைப்பது என்ன அப்படி இழிவான செயலா? இல்லை தேச குற்றமா? வலைப்பதிவுலகுக்கு வந்து விட்டீர்களே அப்புறம் என்ன? இங்கு எல்லோரும் சமம் தானே?.

3). தலைக்கு மேல் ஏறிக் கொண்டு நம்மைக் கழுதை மேய்க்கப் பார்க்கிறார்கள்
வைப்பதிவர் சந்திப்பை கழுதைமேய்ப்பது என்று சொல்லுகிறீர்களா இல்லை அதில் கலந்துகொள்ள அழைத்ததை கழுதைமேய்ப்பது என்று சொல்லுகிறீர்களா ?

4). பதிவர்கள் கூட்டத்திற்கு ரஜினிகாந்தையும் அழைத்திருக்கிறீர்களா? அப்படியானால் நானும் வருகிறேன். சரியா?
உங்களை ரஜினிகாந்துக்குஇனையாக நினைத்துகொன்டிருக்கிர்களா? இல்லை ரஜினிகந்த்துக்கு இனையிட்டு யாறேனும் சொல்லியிருக்கிறார்களா? தற்புகழ்ச்சி என்பது இதுதானோ?

5). தினமலரில் அந்துமனியாக எழுதுவது நீங்கள்தான் என்று கேள்விப்பட்டேன் நிஜமா?

==========================================================

லக்கியின் அந்தப்பதிவுக்கு, முகம் காட்ட வெட்க்கப்படும் ஒருவர் பின்வருமாறு பின்னூட்டமிட்டு இருக்கின்றார்.

"வலைப்பதிவு செய்பவர்களுக்கு தாங்கள் ஏதோ பெரிய பிரபலம் என்ற நினைப்பு இருக்கிறது. வலையுலகை தவிர அவர்களை வெளியில் ஒரு ஈ காக்காவுக்கு கூட தெரியாது என்பது வேறு விசயம்.
சாரு அவர்கள் பிரபலமான ஒரு எழுத்தாளர். ரஜனி கமல் கூட எல்லாம் பழக்கம் வைத்துள்ளவர். சினிமா உலகில் அவர் பிரபலமான ஆள். எழுத்துலகிலும் சாரு அவர்களை தெரியாதவர்களே இருக்க முடியாது.
இவ்வாறு இருக்க நீங்கள் எவ்வாறு அவரை பதிவர் சந்திப்புக்கு அதுவும் காந்தி சிலையின் பின்னால் பேச (வெட்டியாக) அழைக்க துணிச்சல் வந்ததது? "

வலைப்பதிவுலகம் மிகச்சக்திவாய்ந்த ஊடகமாக மாறிக்கொன்டிருக்கின்றது. கருத்துப்பரவலின் ஒரே காரணியாக பத்திரிக்கைத்துறை இருந்தகாலம் மறைந்து கொன்டிருக்கின்றது. பத்திரிக்கை த்துறை மட்டுமே ஒட்டுமொத்த சொந்தம் கொன்டாடிகொன்டிருந்த கொன்டிருந்த அந்த சக்திக்கு பங்குபோட வலைப்பதிவுலகம் வந்துவிட்டது.

கூகிள் நிறுவணம் இந்தியாவில் இல்லாத காரணத்தால், ஒரு சிலரால் மட்டுமே இவ்வூடகத்தை கையகப்படுத்த முடியவில்லை. மாறாக இயல்பான முறையில் பரவிக்கிடக்கின்றது. கூகிளுக்கு நன்றி.

ஐய்யா Anonymous அவர்களே, சாரு இந்த வலைப்பதிவின்மூலம்தான் தனது கோபத்தை வெளிப்படுத்த முடிந்தது என்பதை கருத்தில் கொள்ளவும். அதைவிடுத்து வெளியே சொல்லியிருந்தால் வெளியில் ஒரு ஈ காக்காவுக்கு கூட தெரியாது என்பது அனைவரும் அறிந்த விசயம்.
வலைப்பதிவில் சகலரும் சமமே. பதிவர்கள் பதியும் கருத்துக்களும் அதன் நடையும், தோரனையும் அட அட அட கலக்குறாங்கப்பா.

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2008

இதென்ன புதுக்கதை

இதென்ன புதுக்கதை
http://www.tamilhindu.com/
தமிழரின் தாய் மதம் என்ற முகப்புடன் உள்ள இந்தத்தளத்தினை ஐய்ய‌மாருங்க‌ எல்லாம் தங்களது வலைப்பதிவில் சிபாரிசு செய்கிறார்கள். சிரிப்பாயிருக்கின்றது இதைப்பார்த்தால்.

தமிழ் வீனாய்ப்போன மொழி தமிழ் மூலம் கடவுள்களுக்கு மந்திரம் சொன்னால் கேடுவிளையும். தமிழர்கள் கோவிலில் சாமிசிலை இருக்கும் இடத்துக்கு வரக்கூடாது, என்று சொன்னவர்கள் ஏன் இப்படி திடீர்னு அந்தர் பல்டி அடிக்கிறார்கள்?

தமிழர்களின் சம்பிரதாயமான பழக்கவழக்கங்களை ஜெயலலிதா மூலம் சட்டமியற்றி கடா வெட்டக்கூடாது, கோழி பலியிடக்கூடாதுன்னு சொன்னவர்கள் இப்படி திடீர்னு அந்தர் பல்டி அடிக்கிறார்கள்?

மனித உடலின் நிறங்கள் அடிப்படையில் அவன் செய்யவேன்டிய தொழிலை நிர்மானித்த‌து வர்ணாசிரமம். பிராமணர்களை உயர்ந்த இடத்தில் வைத்து கல்விக்கு உரிமையுடைய ஒரே இனம் பிராமணர்கள்தான் என்று தமிழர்களை கன்மூடித்தனமாக வஞ்சித்த வர்னாசிரமத்தை பின்பற்றச்சொல்லும் கீதை மற்றும் ராமாயனத்தை கொன்ட இந்துமதத்தைக்கொன்டவர்கள்தான் தமிழர்கள் என்று சொல்கிறார்களா?

இல்லை

தமிழர்கள் விழித்துக்கொன்டிருக்கின்றனர், நமது பருப்பு இனிமே வேகாதுன்னு புரிஞ்சிகிட்டு நாங்களும் தமிழர்கள்தான் எங்களையும் உங்களோடு சேத்துக்கொன்ங்கன்னு என்று கைபர்‍போலன் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவியவர்கள் சொல்லுகிறார்களா?

எப்படியோ இனைய வலைப்பதிவு என்ற ஊடகத்தின்மூலம் ஒரு கருத்துப்பரவல் புரட்சி நடந்து தமிழர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை புரிந்திருக்கின்றார்கள் என்பதையே இது காட்டுகிறது.

அந்தத்தளத்தில் (http://www.tamilhindu.com/)
தமிழர்கள் எல்லாம் முஸ்லீம் மதத்துக்கு போறாங்க, கிருஸ்து மதத்துக்கு போறாங்கன்னு ஐய்யமாருங்க எல்லாம் இப்படி அடிச்சுக்கிறாங்க. இந்துமதத்தால் மற்ற மதத்தவர்களை ஈர்த்து இந்துமதத்துக்கு மாற்றும் வல்லமை இல்லையா? அட போங்க, தன் மதத்தவர்களையே தக்கவைத்துக்கொள்ளூம் வல்லமை இந்துகடவுள்களுக்கு இல்லை, இதில் எங்க கிருஸ்துவர்களை ஈர்க்கப்போகுது.

தமிழர்கள் எம்மதமும் சம்மதம்னு நினைப்பவர்கள். மசூதிக்கு மந்திரிக்கப்போவது, சர்ச்சுக்கு வழிபடப்போவதுன்னு எந்த பேதமும் பார்க்கமாட்டார்கள். நாகூர் தர்கா மற்றும் வேளாங்கன்னி கோவிலுக்கு வரும் இந்து தமிழர்கள் கூட்டத்தினை பார்த்தால் புரியும்.


நாளுக்குநாள் கோவிலுக்கு வரும் தமிழர்கள் கூட்டம் அதிகமாயிக்கிட்டேபோகுது ன்னு ஐய்யமாருங்க எல்லாம் பூரிச்சுக்கிறாங்க. தமிழர்கள் பக்தி பற்றி நல்லாவே தெரியும்.

கஷ்டகாலத்தில் கையொடிய கடவுளை கும்பிடும் அவர்கள் மற்றநேரங்களில் கன்டுகொள்வதே இல்லை.
'உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்' திரைப்படத்தில் கார்த்திக் மற்றும் ரமேஷ்கன்னா இருவரும் திருடச்செல்வார்கள், அதுக்குமுன் சாமியிடம் திருட்டில் கிடைப்பதை சாமிக்கும் கொடுக்கின்றோம் என்று சொல்லி மனமுருக கும்பிட்டுச்செல்வர். திருடிய பிறகு இருவரும் கடவுளுக்கு பங்கு கொடுக்கும் அழகை பாருங்கள்.
ரமேஷ்கன்னா ஒரு வட்டம் வரைந்து, திருடிய ரூபாய்களை மேலே விட்டெறிந்து கடவுளே உனக்கு வேன்டிய பங்கை வட்டத்துக்குள்ளே எடுத்துக்கொன்னு சொல்லுவார். கீழே விழுந்தபிறகு ஆகா உனக்கு கொஞ்சமா எடுத்துக்கிட்டு எனக்கு நிறைய குடுத்துட்டியேன்னு சொல்லுவார். பிறகு கார்த்திக் சொல்லுவார், கடவுளே உன்னை ஒரு வட்டத்துக்குள் அடைக்க விரும்பவில்லை, நான் உயரே தூக்கிப்போடுகிறேன், உனக்கு வேன்டியதை எடுத்துக்கிட்டு மிச்சத்தை எனக்குபோடுன்னு சொல்லி அனைத்தையும் லவட்டிக்குவார்.

இதுதான் தமிழர்களின் பக்தி லட்சனம். மாதாம் ஐந்தாயிரம் ரூபாய் தருகிறேன் என்றால் தங்களது பரம்பரையையே வேறுமதத்துக்கு மாற்றிவிடுவார்கள்.

செவ்வாய், 29 ஜூலை, 2008

போலி டோன்டு விவ‌கார‌ம்

போலி விவ‌கார‌ம் முடிவுக்கு வ‌ந்துவிட்ட‌‌து என்று ஐய்ய‌மாருங்க எல்லாம் கொண்டாட்ட‌ம் போடுறாங்க‌. ம‌லேசிய‌ மூர்த்திதான் போலி டோன்டு என்று சொல்லி போலீஸ் விசார‌னைக்கு உட்ப‌டுத்தி விசாரித்து மிர‌ட்டி என்ன‌ன்னெவோ ந‌ட‌ந்துவிட்ட‌து.

என‌க்கு இர‌ண்டு கேள்விக‌ள் ம‌ன‌தில் இந்நேர‌ம் எழுகின்ற‌து.

1). இனைய‌த்தில் இடும் ச‌ன்டைக‌ளுக்கெல்ல‌ம் போலீஸ் உய‌ர‌திகாரிக‌ள் வ‌ந்து ப‌ஞ்சாய‌த்து செய்வார்க‌ளா என்ன‌?

2). யாரேனும் ஆட்சேபிக்கும் ப‌ட்ச‌த்தில் குறிப்பிட்ட‌ ஒரு வ‌லைப‌திவினை கூகிள் நீக்கிவிடுமா என்ன‌?

இவையெல்லாம் போக‌ட்டும். மூர்த்தி மேலுள்ள‌ த‌னிப்ப‌ட்ட‌ விரோத‌த்தினால் அவ‌ர்தான் போலி என்று சொல்லி அவ‌ரால் ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌ போலித்த‌ள‌ங்க‌ளை அவ‌ராலேயே போலீஸ்மூல‌ம் மிர‌ட்டி நீக்க‌வைத்த‌வ‌ர்க‌ளால் ஏன் doondu.blogspot.com வ‌லைப்ப‌திவினை நீக்க‌முடிய‌லை? மூர்த்தியின் மன்னிப்பு பதிவு ஏன் doondu தளத்தில் போடப்படவில்லை? இதிலிருந்தே தெரிய‌வில்லையா. போலியார் யார் என்ப‌து.

நான் ஏற்க‌ன‌வே சொல்லியிருக்கின்றேன், மீன்டும் சொல்லுகிறேன். போலியார் என்ப‌து த‌னியாள் அல்ல‌. ஒடுக்க‌ப்ப‌ட்ட‌ த‌மிழ‌ர்க‌ளின் உள்ள‌க்குமுற‌ல்தான் அது.