சனி, 31 ஜனவரி, 2009

தமிழ்நாட்டு தமிழர்களை ஒழிக்க இந்த உலகம் முற்ப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை

உங்களுக்கு என்ன தீர்வு என்று சொல்லமாட்டோம், எப்படிப்பட்ட வாழ்வுன்னு சொல்லமாட்டோம், எல்லோரும் முல்லைத்தீவைவிட்டு வெளியே வாருங்கள் உங்களையெல்லாம் தனிதனியாக சித்திரவதை , கற்பழிப்பு என்ற பெயரில் கொல்லுகிறோம். அப்படி இல்லையென்றால் குன்டுபோட்டு கொல்லுகிறோம் மொத்தமாக சாவுங்கள் என்று ஒர் கொடூரன் கொக்கரிக்கிறான், அவனை கேட்க்க ஒரு நாதியில்லை.
சே என்ன கருமம் பிடிச்ச உலகம் இது. தமிழர்களை திட்டம்போட்டு அழித்தொழிக்கும் நிகழ்ச்சிக்கு சொந்த விரோதங்களை எல்லாம் மூட்டைகட்டி வைத்துக்கொன்டு ஒற்றுமையாக செயல்படும் காங்கிரஸ், பிஜேபி.
தமிழர்களும் இந்தியர்கள்தானே அவர்களின் உறவுகள்தானே ஈழத்திலும் இருக்கிறார்கள் அவர்களுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை சொன்னல் குடுமுழுகிப்போய்விடு என்று ஆந்திரா, கர்னாடகா, கேரளவாசிகள் மற்றும் வட இந்தியர்கள்.
எனது ஆந்திர நன்பர் சொன்னார், பிரபாகரன் இந்திய, இலங்கை, சிங்கப்பூர் மலேசிய தமிழர்களை எல்லாம் ஒன்றினைத்து அவர்கள் வாழும் அந்த அந்த நாட்டு பகுதிகளை தனி நாடாகெ பிரித்து அனைத்துக்கும் தலைவனாகனும்ம்னு சொல்லியிருக்கிறாராமேன்னு கேட்டார்.
அடப்பாவிகளா இப்படியா திட்டம்போட்டு கதைபரப்புவீகள். தமிழன் என்றான் ஏன் இத்துனை கசப்பு ஊடகங்களுக்கும்?

அதையும் மீறி உணர்வை காட்ட முத்துக்குமரன் வேன்டியிருக்கு.
முத்துக்குமரா, உன் சாவைக்கூட தமிழர் தவிர எல்லோரும் கேவலமாக பேசுறாங்கப்பா, ஈழத்தமிழர்கள் மீது கரிசனமாக இருக்கின்றோம் ந்னு சொன்னாக்கூட பிடிச்சி உள்ள போடுறாங்க, அதையும் செய்தியாகூட காட்ட மாடேங்குறாங்க. எங்கடா ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு இருக்குறது வெளிய தெரியகூடாதுன்னு பDகறுறாங்க, அதையெல்லாம் மீறீ ஆதரவைக்காட்டனும், தமிழ் உணர்வுகளை தட்டிஎழுப்பனும், நமது எண்ணங்கல் கடிதத்தின் வாயிலாக உலகம் பரவனும்ன்னு செஞ்ச காரியம், உன்மையில் மகத்தானது. விடுதலைப்போராட்ட வீரங்களுக்கு சற்றும் குறைவில்லாதது. நீ வாழ்க , உனது வீரம் இவ்வுலகில் தமிழர்கள் உள்ள வரை அவர்கள் தம் நெஞ்சங்களில் இருக்கும்.

ஒரு பிரபாகரன் உருவாக்கபட்டதன் காரணத்தயே மறந்து மீன்டும் மீன்டும் ஓராயிரம் பிரபாகரன் களை உருவாக்காமல் விடமாட்டார்கள் இவர்கள்.

தமிழர் விரோத ஊடகங்கள்தான் இப்படிச்செய்கின்றன என்றால், தினகரன் கூட இப்படி செய்கிறதே. கலைஞரை நம்மி பிரயோசனமே இல்லை, யார் மீதும் நம்பிக்கை இல்லை. இலங்கைக்கொடூரன் அறிவித்த இரண்டு நாள் தவனை முடிந்துவிட்டது, என்ன ஆகுமோன்னு துக்கம் தொன்டையை அடைக்குது.
தமிழர்களுக்கு இதையெல்லாம் செய்கிறேன், இதுக்கு பிரனாப்முகர்ஜி, சோனியா, தங்கபாலு,பெரியாரின் பேரன் இளங்கோவன் இவர்கள் எல்லாம் சாட்சின்னு அந்த இலஙைக்கொடூரன் சொல்லட்டும், பார்க்கலாம். அப்படி தமிழர்கள் நலன் உறுதி செய்யப்படும் பட்சத்தில், புலிகள் ஏனப்பா ஆயுதத்தை தூக்கப்போகிறார்கள்? அந்னேரத்தில் என் தலைவன் பிரபாகரன் இன்முகத்தோடு தன்னுயிரைத்தருவான்.

எனது முந்தைய பதிவில் சொன்னதுபோல தமிழ்நாட்டு தமிழர்களை ஒழிக்க இந்த உலகம் முற்ப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

செவ்வாய், 27 ஜனவரி, 2009

மயானமாகிப்போகும் கிழக்குமாசி வீதிகளும் ரங்கநாதன் தெருக்களும்

தினமும் நெருடல், புதினம், தினக்குரல், தமிலிஷ் மற்றும் தமிழ்மணம் இனைத்தளங்களை பார்த்து பார்த்து ஏங்கி ஏங்கி இன்று ஏதாவது நல்ல மகிழ்சியான செய்தி வராதா என்று ஏமாந்து போயிக்கொன்டே இருக்கின்றேன். மனது கன‌க்கின்றது. ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க இவ்வுலகத்தில் எவருமே இல்லை.
சோனியாவின் கல் மனது கரையவே கரையாது போல இருக்கு. கலைஞர் ஏன் இப்படி வழ வழா கொழ கொழாவாகிப்போனார் என்றே தெரியலை. எத்துனை வருடம் ஆட்சியில் இல்லாமல் இருந்திருக்கின்றார், தமிழர்களிக்காக ஆட்சியை துறந்தால்தான் என்ன?
இல்லை விடுதலைப்புலிகள் மற்றும் ஈழத்தமிழர்கள்மீது இந்த தவறுகள் எல்லாம் உள்ளன, அதனால் நான் இதையெல்லாம் செய்யமுடியாத சூழ்நிலையில் இருக்கின்றேன் என்றாவது சொல்லலாமே?
சந்தோஷம் பிடுங்கப்பட்டு, வசந்தத்தை தொலைத்துவிட்டு வெறுமையில் இருக்கும் ஈழத்தமிழர்களின் நிலை தமிழ்நாட்டுக்கும் வரும் காலம் தொலைவில் இல்லையென்றே எனக்கு தோன்றுகின்றது. கிழக்குமாசி வீதிகளும், ரங்கநாதன் தெருக்களும் புல் பூன்டு நிறைந்த காடாகும் காட்சி என் கண்களுக்கு தெரிகின்றது. அப்பொழுதும் இருப்பதைவைத்துக்கொன்டு உயிர்வாழந்தால் போதுமென்று ஒட்டிக்கொன்டிருக்கும் தமிழர்களை க்கன்டு இந்த உலகமே சந்தோஷமாக இருக்கும் காட்சியும் எனக்கு தெரிகின்றது.
வாழ்க உலகம்.

வெள்ளி, 23 ஜனவரி, 2009

இந்தியா ஒரு பயந்தாங்கொள்ளிநாடு

நிலமை சரியாகவே இல்லை மேலும் மேலும் மோசமாகத்தான் போயிக்கொன்டு இருக்கின்றது. ஈழத்தமிழர்களைப்பற்றித்தான் சொல்லுகிறேன்.

விடுதலைப்புலிகள் ஏன் இப்படி பின்வாங்கி ஓடுகின்றனர் என்று புரியாத புதிராகத்தான் இருந்தது, மனதுக்கும் கலக்கமாக இருந்தது. சந்தோஷமாக பதிவுகள் இடக்கூட மனது வரமாட்டேன் என்கிறது.

நாங்கள் களத்தில் செம்மையாக பணியாற்றுகிறோம் அனைத்தையும் உடைத்து கூறமுடியாது என்ற புலிகளின் செய்தியை கன்டு மனம் சற்று நிம்மதி கொள்கிறது.
புலிகளின் செய்தியினை இங்கே கானவும் http://www.youtube.com/watch?v=kXNSLfGUrTk

மகிந்தவின் போருக்கு ஜப்பான் ஆதரவு என்று செய்தி நெருடல் இனையத்தில் படிக்க நேர்ந்தது, தமிழர்களை ஒடுக்க உலகமே ஒன்றுபட்டு உழைக்கின்றன.

ஜப்பானில் இருந்த காலத்தில் எனக்கு இரண்டு ஈழத்தமிழ் நன்பர்கள் இருந்தனர், நான் தங்கியிருந்த மேன்ஷனிலேயே இருந்தனர். நான் அவர்களிடம் சென்று வாஞ்சையுடன் பேசிக்கொன்டிருப்பது வழக்கம். அவர்களது குடும்பத்தில் ஒவ்வொருவரும் உலகத்தின் ஒவ்வொரு மூலையில் இருப்பதை யும், நான் குடும்பத்தைவிட்டு தனித்து இருப்பதையும், குடும்பத்தோடு இருந்த காலத்தினை சிலாகித்து பேசிக்கொன்டு இருப்போம். ஈழத்தமிழர்களின் சுத்தமான தமிழ் பேச்சினை ரசித்துக்கேட்ப்பது எனக்கு நிரம்பவும் பிடிக்கும். ஒருமுறை அந்த ஈழ நன்பர் என்னிடம் பேசிக்கொன்டு இருக்கும்போது
"நீங்கள் யாரிடம் கதைத்துக்கொன்டிருக்கின்றீர்கள் என்று தெரியுமா? பிரபாகரனின்ட மகனிடமாக்கும்" என்றார் அதைக்கேட்டு எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. பிறகு சொன்னார் பகடிக்காக அப்படி கதைத்தேனென்று.

பத்திரிக்கைகள் எல்லாம் தலையங்கத்தில் எழுதுகின்றன, சிவசங்கரமேனன் போனது, போய் சிங்கள ரானுவத்தை பாராட்டிவிட்டு வந்தது, பிரனாப் போகாதது தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தமிழ் ஆர்வல தலைவர்களை இந்திய அரசு கேனையர்களாக நினைத்துக்கொன்டிருப்பதை.

ஆனந்தவிகடனில் கீழ்கன்டவாறு தலையங்கம் எழுதப்பட்டு இருக்கு

"செருப்பால் அடித்துவிட்டுக் கருப்பட்டி கொடுக்கும் அசிங்கத்தைக் கூசாமல் செய்திருக்கிறது மன்மோகன் சிங் அரசு. நொந்துபோன இதயங்களில் மறுபடி கூர் வேல் பாய்ச்சி இருக்கிறது.

அப்பாவித் தமிழரின் நலன் காக்க, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி விரைவில் இலங்கை செல்வார் என்று தொடர்ந்து வெளியாகிவந்த செய்திகள் எதிர்பார்ப்பு கலந்த ஆறுதலை அளித்தன. அமைச்சருக்கு அப்படி என்னதான் 'தலைக்கு மேல்' வேலையோ... அவருக்குப் பதிலாக, வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவசங்கர் மேனனை மத்திய அரசு அனுப்பிவைத்ததே பெரிய தவறு!

கண்டியில் ராஜபக்ஷேவைச் சந்தித்தபோது, 'யுத்தத்தின் பெயரால் தமிழர்களைக் கொன்று குவிப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்று சிவசங்கர் மேனன் சொல்லவில்லை. மாறாக, 'போர்ச் சூழலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்திய அரசு நிவாரண உதவிகள் அளிக்கும்' என்று மோசமான ஒரு வாக்குறுதியை அளித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்.

பாலஸ்தீனத்து மக்களின் மீது குண்டு வீசக் கூடாது என்று நான்கு தடவை இஸ்ரேலைக் கண்டிக்கத் தெரிந்த மத்திய அரசுக்கு, கூப்பிடு தொலைவில் நடக்கும் அநியாயத்துக்கு எதிராகக் குரல் உயர்த்த மனம் இல்லாதது எத்தகைய கொடுமை!

'இந்தியாவின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம். எனவே, இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட முடியாது' என்பதே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்றால், அதை வெளிப்படையாக அறிவிப்பதில் என்ன தயக்கம்? 'இல்லை, இல்லை... ஈழத் தமிழர் அனைவரும் எங்கள் தொப்புள்கொடி உறவு. அவர்கள் துன்பத்தைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்' என்பதே உண்மையான நிலைப்பாடாக இருந்தால், உடனடியாக இலங்கை அரசின் சிண்டைப் பிடித்துக் கண்டிக்க வேண்டாமா?

நாட்டுப் பாதுகாப்பும் முக்கியம், ஓட்டுப் பிச்சை வாங்குவதும் முக்கியம் என்ற வழவழா கொழகொழா அணுகுமுறை காரணமாக நாடகமாடுவதும் நாட்களைக் கடத்துவதுமே தொடர்ந்தால்... மத்திய அரசின் மீதான நம்பிக்கை அற்றுப்போய், அதுவே நம் உள்நாட்டு அமைதிக்கும் வேட்டாகிவிடும்!"



இதையெல்லாம் பார்க்கும்போது இந்தியா ஒரு பயந்தாங்கொள்ளிநாடு என்ற சிந்தனை வருது.
ராஜீவ்காந்த்தியினை ஒரு சிங்களன் துப்பாக்கியால் தாக்கியதை பார்த்தாலே தெரியும் சிங்களர்கள் இந்தியா மீது எத்துனை கடுப்பா இருக்கின்றனர் என்று. ஈழத்துக்கு ஆதரவாக ஏதாவது பேசினால், இலங்கை சரத் பொன்சேகா சோனியாவை கோமாளி என்று சொல்லுவார், மஹிந்த மிக கேவலமாக மன்மோகனிடம் சவால் விடுவார், அதை எதிர்த்து எதுவும் சொல்லமுடியாது. இப்படி ஒரு நிலமை வந்தால் இந்திய அரசாங்கத்துக்கு கையாலாகாத அரசுன்னு பேர் வந்துடும். அதுக்கு பயந்துதான் இப்படி மொழுகுகின்றனர். தமிழர்கள்தானே அவர்கள் கேவலமாக பேசமாட்டார்கள், பன்பு பாசம் ன்னு போயிடுவாங்க அதுனால தமிழர்கள் செத்தால் சாகட்டும்னு சிங்களத்துக்கு சிங்கியடிக்கிறாங்க.

செவ்வாய், 6 ஜனவரி, 2009

சோனியா கந்த்தி ஒரு அரக்கி

குளிர்கால விடுமுறைதினத்தை பயனுள்ள வகையில் கழிக்கவேன்டும், குடும்பத்துடன் ஓரிரு இடங்களுக்கு சென்றுவரலாம் என்று இருந்த நேரத்தில். எதிர்பாராதவிதமாக காலிலும் தலையிலும் அடிபட்டு 10 நாள் படுத்தபடுக்கையாக இருக்க நேரிட்டுவிட்டது. அதற்க்குள் ஏகப்பட நிகழ்வுகள் நடந்தேறிவிட்டன. புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லக்கூட மனம் வரவில்லை.

உலகநாடுகளின் பண, ஆயுத மற்றும் ஆள் பலத்துடன் இலங்கை தமிழர்களின் வாழ்வினை பறிக்கும் நிகழ்ச்சி தமிழர்விரோதகாரர்களின் மனம் போலவே நடந்துவருகின்றது. தங்களுக்கென்று வரைமுறை வைத்து தங்களுக்குள்ளேயான நிர்வாகத்தால் வாழ்ந்துகொன்டிருந்த வடக்குப்பகுதி தமிழ்மக்கள் உலகச்சிறப்பு பெறுவதை பொறுக்கமுடியாத, சிங்களர்களும் தமிழர்கள் அல்லாத மற்ற உலகத்தீரும், அவர்களை அடித்து விரட்டிய வண்ணம் இருக்கின்றனர்.

ஒரு லட்சம் பேரை மனித கேடையமாக பிடித்து வைத்திருக்கின்றார்கள் விடுதலைப்புலிகள் என்று உலகத்தோர் கூக்குரலிட்டு தமிழர்பகுதிகளை கொலைக்களமக்கினர். இப்பொழுது கிளிநொச்சிக்கு சென்று அங்கு யாருமே இல்லாததைப்பார்த்து விடுதலைப்புலிகளும் மக்களும் ஒன்றுதான் என்பதை உலகம் உணர்ந்துகொள்ளுமே என்று பயந்து நம்ம ஊர் தினமல்ர் பத்திரிக்கை உலக மகா ஜோக்கான செய்தியினை வெள்யிட்டு உள்ளது.

விடுதலைப்புலிகள் ஒரு லட்சம் மக்களையும் கேடையமாக பிடித்துக்கொன்டு முல்லைத்தீவு மற்றும் யானையிறவு பகுதிக்குள் சென்றுவிட்டனராம்.

அடப்பாவிகளா ஒரு இனத்தையே கூன்டோடு அழிக்கும் செயலினைக்கண்டித்து தமிழர்கள் தவிற யாருமே கருத்துசொல்லவில்லையே இந்த உலகத்தில்.

இந்நிலையில் சோனியா காந்தியினை என்னன்னு சொல்லுவது?
பதவிக்கக தமிழர்களை அடகுவைத்த தமிழக காங்கிரஸ் காரர்களையும் திமுக மற்றும் பாமக காரர்களையும் என்னன்னு சொல்லுவது.

சோனியா கந்த்தி ஒரு அரக்கி
தமிழக காங்கிரஸ், திமுக மற்றும் பாமக காரர்கள் கையாலாகத வர்கள், பதவிக்காக டெல்லி காங்கிரஸின் அடிவருடுபவர்கள்


ஏதோ பாஜக கொஞ்சம் மனம் மாறி தமிழர்களின் ஆதரவினை பெறும் நோக்கில் ஆதரவான பேச்சுக்களை ஆரம்பித்து இருப்பது வரவேற்க்கத்தக்கதே.