ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

ஈ ஈ ஈ என இளித்த ஈயம் (இன்ஃபோசிஸ் நாராயன மூர்த்தி நியமனம்.)

ஈ ஈ ஈ என இளித்த ஈயம் (இன்ஃபோசிஸ் நாராயன மூர்த்தி நியமனம்.)
தமிழர்களின் படுகொலை, தமிழ் இளைஞர்கள் சித்திரவதை மற்றும் தமிழச்சிகள் கற்பழிப்பு என்று இந்தியாவின் ஆசீர்வாத்த்தோடு சிங்களர்கள் நடத்தும் கொலைவெறியாட்டத்துக்கு உலக அளவில் எந்த ஒரும் எதிர்ப்பும் இல்லாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது.

இந்தியாவிலும் தமிழ்நாட்டினரைத்தவிற மற்ற மாநிலத்துக்காரர்கள் நடப்பவைகளை கமுக்கமாக மனதுக்குள் ரசித்தவாறு உள்ளனர். பிஜேபியை சேர்ந்த சாரி ஷேஷாத்திரி என்ற நாய் இலஙைத்தமிழர்கள் சிங்கள அரசு சொலவதைத்தான் கேக்கனும் பகிரங்கமாக அறிக்கை விடுகிறான்.

சிங்கள ரானுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்ச்சி கொடுக்கப்படுகிறது மற்றும் ஆயுத மற்றும் ஆள்படை உதவி செய்கிறதுன்னு தமிழக அரசியல் தலைவர்கள் எல்லாம் அலறுறாங்க இந்திய அரசோ அதை மறுத்தும் சொல்லலை அமைதியாக சிங்கள அரசுக்கு ஆசி வழங்கிக்கொன்டிருக்கிறது. வட இந்திய அரசியல் தலைவர்கள் எல்லாம் நாங்கள் எல்லாம் தங்கம் தங்கமாக்குமென்று சொல்லிக்கொண்டிருக்கின்ற வேளையில் தங்கத்துக்குள் இருக்கும் ஈயம் ஈ ஈ ஈ ஈ என இளித்து விட்டது.

ஆமாம் இலங்கை என்ற நாடு இந்தியாவில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தலைவர் நாராயன மூர்த்தியை இலங்கைநாட்டுக்கான தொழில்நுட்ப வளர்ச்சிக்கான ஆலோசகராக நியமித்திருக்கின்றோம் என்று கூப்படு போட்டு அறிவித்து இருக்கின்றது. இலாகாவாரியான ஒப்பந்தங்களை இப்படி அரசாங்கமே மகிழ்ச்சியாக அறிவித்ததன் காரனம் என்னன்னு கூர்ந்து யோசித்தால் விளங்கும். இதில் ராஜ பக்சேயின் நன்றிவிசுவாசம்தான் தெரிகிறது. நான் இந்தியாவில் உள்ள உங்களில் ஒருவரை எங்கள் நாட்டுக்கே ஆலோசனை வழங்கும்மளவுக்கான அறிவாளியாக காட்டியிருக்கின்றேன், உங்களுக்கு திருப்திதானேன்னு கேட்க்கும் தொனிதான் தெரியுது.

இந்த நன்றி விசுவாசம் யாருக்கு? வியாபார ஒப்பந்தங்களை மீறிய தனி நபரை பெருமைப்படுத்தும் இந்த செயல் ஒரு ரகசியத்தை அம்பலப்படுத்தியிருக்கின்றது.

இப்படி சிங்க்கள அரசுக்கு தமிழர்களை அழித்தொழிக்கும் செயலுக்கு உதவிசெய்பவர்களை திருப்திப்படுத்தும் நோக்கம் அவர்களை அடையாளம் காட்டிவிட்டது.

இந்தியாவில் முன்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு இன்ஃபோசிஸ் நாரயன மூர்த்தி ஐயங்கார் மற்றும் சேஷன் ஐய்யர் (முன்னாள் தேர்தல் தலமை அதிகாரி)இவர்கள் இருவரையும் ஒரு கூட்டம் முன்நிறுத்தியது. இவர்கள் இருவரும் உலகளாவிய அறிவாளிகள் இவர்களை இந்திய ஜனாதிபதியாக்கிவிட்டால் இந்தியா உலகின் தலைமை நாடாகிவிடும் என்றெல்லாம் வித்தை வார்த்தைகளால் முன் மொழிந்தனர்.
இதே கூட்டம்தான் இலங்கைதமிழர்களை அழித்தொழிக்கும் கூட்டத்துக்கு அறிவுறை, ஆலோசனை மற்றும் உதவிசெய்யும் கூட்டம் என்பது கொலைக்கொடூரன் ராஜ பக்சேவின் நன்றி விசுவாசத்தில் தெரிந்துவிட்டது.
இந்த கயமைக்கூட்டத்தினால் இந்தியா அழியப்போவது உறுதி.

வியாழன், 5 பிப்ரவரி, 2009

முதுகெலும்பு இல்லாத இந்தியா

அனைத்துலக போர் சட்டவிதிகளை இரு தரப்பும் பின்பற்ற வேண்டும்: அமெரிக்கா, பிரித்தானியா வேண்டுகோள்.

http://www.nerudal.com/nerudal.272.html

முதுகெலும்பு இல்லாத இந்தியா. மற்ற நாடுகளுக்கு இருக்கும் மனிதத்தன்மை இந்திய மற்றும் தமிழக அரசுகளுக்கு இல்லையே. உண்மையில் தமிழ்ர்கள் இந்தியாவில் ஒரு அங்கம் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன். கொல்லச்சொல்லுவதே இவர்கள்தாம் இவர்கள் எப்படி இலங்கை அரசை போர் நிறுத்தம் செய்ய சொல்லுவார்கள்?

இவர்களா தமிழ்நாட்டின் நலனை காக்கப்போகிறவர்கள்? சோனியா எந்த தைரியத்தில் ஒட்டுக்கேட்டு தமிழகத்துக்குள் வருவார்?

இந்திரா காங்கிரசுக்கு ஓட்டுப்போடும் மாபெரும் வரலாற்று தவற்றினை செய்து விடாதீர்கள் மக்களே . செருப்பால் அடித்து துரத்துங்கள்.
தயாநிதியின் சொல்கேட்டு மக்கள் தலைவர் போல் அல்லாமல் வியாபாரி போல் நடந்த்துகொள்ளும் கலைஞருக்கும் சரியான பாடம் புகட்டுங்கள்.

புதன், 4 பிப்ரவரி, 2009

கலைஞரின் இக்கட்டான சூழ்நிலை

கலைஞரின் இக்கட்டான சூழ்நிலை புரிகிறது. காங்கிரசுடன் உறவுவைத்துக்கொள்ள அதிமுக துடித்து காத்துக்கொண்டிருக்கு தமிழாக காங்கிரஸ் காரர்கள் பலரும் அதிமுகவுக்கு சேவகம் செய்ய காத்துக்கொண்டு இருக்கிறார்கள் . ஈழத்தமிழர்கள் ஆதரவு நிலை எடுத்தால் கண்டிப்பாக திமுக ஆட்சி காங்கிரசால் கலைக்கப்பட்டுவிடும் , தமிழ்நாட்டு மக்களையும் நம்ப முடியாது, முன்னர் செய்ததுபோல் ஜெயலலிதாவை ஆதரித்து வரவைத்துவிட்டால் என்னசெய்வது?
கலைஞரின் இக்கட்டான சூழ்நிலை புரிகிறது.
சூழ்நிலையின் தீவிரத்தினை குறைக்க, சோனியாவையோ, அல்லது வேறு முக்கியமான காங்கிரஸ் தலைவரை தன்நிலை விளக்கம் கொடுக்க செய்யலாமே. தமிழர்கள் நாதியே இல்லாமல் அழிக்கப்படும்போது நாளை தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் நேர வாய்ப்பிருக்கு அப்பொழுதும் உலகமே வாய்மூடி மௌனமாகத்தானே இருக்கும் என்ற அச்சம் அனைவரின் மனதிலும் இருக்கு.

இலங்கைக்கு அழைப்பு விடுத்த மஹிந்தவிடம், வன்னியிலிருந்து வெளியேறும் மக்களின் வாழ்க்கைக்கு என்ன உத்திரவாதம் செய்திருக்கீர்கள் என்று ஒரு கேள்வியேனும் கேட்டிருக்கலாமே?. 2 பேர், 20 பேர்,அட அல்லது 2000 பேர் என்றால், தீவிரவாதிகள் என்று சொல்லலாம், 3 லட்சம் பேர் என்றால் அது சமூகப்போராளிகள்தானே என்று அர்த்தம் இதை ஏன் உலகார்ந்த அறிவாளிகள் சொல்லமாட்டேன் என்கிறார்கள்?

மஹிந்த இலங்கையில் ஓட்டு வாங்குவதற்கு தமிழர்களை கொல்லுகிறான். அது அனைவருக்கும் தெரிந்ததுதான், கலைஞரும் ஏன் ஒட்டு வாக்குவதற்காக இப்படி பேசுகிறேன் என்று காங்கிரஸை சமாதானப்படுத்தக்கூடாது?

எற்கனவே ஈழத்தமிழர்களால் ஆட்சியிழந்தபோது மக்கள் திமுகாவின் முகத்தில் கரியை பூசி அதிமுகாவுக்கு ஓட்டுப்போட்டார்கள்

அடுத்த‌ தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவினை திமுகவுக்கு அளிக்கத்தயாரா என்று திருமா, ராமதாஸ், நெடுமாறன் ஆகியோரிடம் ஏன் பகிரங்கமாக கேள்வி கேட்க்கக்கூடாது? அவர்களின் வன்டவாளம் மக்களுக்கு தெரியும் அல்லவா?

எப்படியோ தமிழர்களின் தலைவர் இன்னும் தடம் புரளவில்லை என்று காட்டக்கூடிய‌ நிலையில் இருக்கின்றார்

செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

முத்துக்குமார், ரவி ஆகியோருக்கான வீரவணக்கக்கூட்டம்

வலைப்பதிவுத் தோழர்களே!

ஈழத்தில் இனப்படுகொலைகளை நிகழ்த்திவரும் சிங்களப் பேரினவாதப் பாசிச அரசிற்கு எதிராகவும் அப்பேரின அரசிற்கு ஆயுதங்கள் கொடுத்து போரை வளர்த்து வரும் இந்திய ஏகாதிபத்தியப் பேரரசிற்கு எதிராகவும் அம்மத்திய அரசிற்குத் துணைபோகும் கருணாநிதியின் தமிழினத்துரோக அரசை அம்பலப்படுத்தும் விதமாகவும் தீக்குளித்து மாண்டுபோன போராளித்தோழர்கள் முத்துக்குமார், ரவி ஆகியோருக்கான வீரவணக்கக்கூட்டத்தில் உங்களையும் கலந்துகொள்ள அழைக்கிறோம்.

நாள் : 08.02.2009 ஞாயிறு மாலை 4 மணி

இடம் : நடேசன் பூங்கா, தி.நகர், சென்னை.


மேலும் தொடர்புகளுக்கு : 9841354308, 9840903590, 9790948623.

ஒருங்கிணைப்பு : ஒடுக்குமுறைக்கு எதிரான வலைப்பதிவர் குழு.

திங்கள், 2 பிப்ரவரி, 2009

அரக்கி சோனியா காந்தி மனதில் என்னதான் இருக்கு?





நேற்றைய தினத்தில் 12 சிறுவர்கள் உட்ப்பட 56 தமிழ்ர்கள் வன்னியில் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இதைப்பார்க்கும்போது இதையமே வெடிக்கின்றது . இணைத்தளத்தில் பதிவெழுதவே மனசுக்கு கஷ்டமாக இருக்குது.

விடுதலைப்புலிகளை அழிக்கின்றேன் என்று சொல்லி மக்களைத்தான் அழிக்கின்றார்கள். வெளியேறும் மக்களுக்கு வாழ்க்கைக்கும் உயிருக்கும் உத்திரவாதம் கொடுக்க மாட்டேன் என்று சொல்லுகிறான் இலங்க்கைக்கொடுஉரன். இதை இவ்வுலகமே வாய் பொத்தி ஊமையாக வேடிக்கை பார்க்கின்றது.
ஏனென்றே புரியலை. ஒரு சின்ன கண்டனம் கூட வெளியிட மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்கள் . உலக நாடுகள் போகட்டும் இந்தியாவுக்கு என்ன ஆச்சு?
இந்தியா ஒற்றுமை ஒற்றுமை என்று கத்துராங்களே தமிழ்ர்களுக்கு ஆதரவா மற்ற மாநிலத்தோர் ஒரு வார்த்தை சொன்னால் என்ன?

அரக்கி சோனியா காந்தி மனதில் என்னதான் இருக்கு?

அய்யா அத்துவானி அவர்களே தயவு செய்து தமிழ்ர்களை காப்பற்றுங்கள் நாங்கள் இந்துத்துவத்தை என்ன எந்தத்துவத்தையும் உயிருள்ள வரை பின்பற்றி பாரதிய ஜனதா கட்சியினை தமிழ் நாட்டில் கோவில் கட்டி கும்புடுகிறோம்

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

கனடா அரசு இலங்கை பிரச்சனையில் பங்களிக்க வேண்டுமா? - கனடிய பத்திரிகையின் வாக்கெடுப்பு

கனடிய அரசு இலங்கை பிரச்சனையில் பங்களிக்க வேண்டுமா? என்ற தலைப்பிலானா வாக்கெடுப்பு ஒன்றைகனடிய பத்திரிகை ஒன்று ஆரம்பித்துள்ளது.




http://www.citynews.ca/polls.aspx?pollid=4786

சகோதர சகோதரிகளே ஒரு நிமிடம் செலவழித்து நம் உறவுகள் காப்பற்றப்பட உங்கள் வாக்குகளை அளியுங்கள்