வியாழன், 23 அக்டோபர், 2008

ஈழம் குறித்த கருத்துக்கள்

தூயாவின் இந்த பதிவில் ஈழத்தைப்பற்றிய கருத்து வினாக்களை கன்டேன், அழைக்காமலேயே எனது கருத்தை சொல்ல ஆசைப்பட்டு சொல்லியிருக்கின்றேன்.


1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?

கடின உழைப்பால், பண்பால் உயர்ந்த இலங்கைத்தமிழர்கள் வாழும் கலைபற்றி தமிழநாட்டு தமிழர்களுக்கு சொல்லிக்கொடுத்தனர். இலங்கைத்தமிழ் வானொலிக்கு தமிழகமே அடிமைப்பட்டுக்கிடந்தது. அதில் வரும் விளம்பரங்களைப்பார்த்தாலே தெரியும் தமிழர்கள் எப்படி ஒரு கட்டுப்பாடான செழிப்பான வியாபாரத்துடன் செழுமையான வாழ்வை வாழ்ந்துகொன்டிருந்தார்கள் என்று.
கடின உழைப்பை கடின உழைப்பால் வெல்லமுடியாத சிங்களர்கள் பேடித்தனமாக அடக்குமுறை, ஒடுக்குமுறை, இடைக்குடியேற்றம் என்று என்னனேனவோ செய்தும் தமிழர்களின் முன்னேற்றத்தினை தடுக்கமுடியலை. முடிவாக கொலைவெறித்தனத்தினை ஆரம்பித்தனர்,.ஒடுக்கப்பட்ட‌ தமிழர்கள் விடுதலைவேன்டி தங்களுக்குளேயே கட்டுப்பாடு கொன்டு தலைவர் பிரபாகரனின் வ்ழிகாட்டலில் மீன்டும் ஒரு கட்டான வாழ்கை அடைந்தபோது அதைப்பொறுக்காத சிங்களர்கள் மீன்டும் கொலைவெறித்தாக்குதல் ஆரம்பித்து இருக்கின்றார். கொலைவெறித்தாக்குதலை தற்காத்தால் அதை தீவிரவாதம் என்று சொல்லுகின்றனர். என்னற்ற தமிழ் உறவுகள் கொல்லப்படுவதை ப்பார்த்து தமிழர்கள் தவிற மற்ற எல்லாரும் இந்த உலகத்தில் சந்தோசப்படுகின்றனர். எங்காவது மனிதாபிமானம் இருக்காதா என்று தமிழர்கள் ஏங்கி ஏங்கி ஏமாந்துகொன்டே இருக்கின்றனர்.


2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?

எனது இதையப்பூர்வமான ஆதரவு உன்டு. தமிழர்களின் கட்டுகோப்பான வாழ்வுக்கு இடையூறு செய்யாமல் இருந்தாலே போதும், இலங்கையை சிங்கப்பூரைவிட மிக உயர்ந்த உலகத்தின் வியாபார மற்றும் சந்தை இடமாக்கி வளம் கொழிக்கச்செய்துவிடுவர்.

3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?

ஈழத்து ச்செய்திகளை நெருடல் மற்றும் புதினம் தளத்தில் மற்றும் கூகிள் தேடுதல் வாயிலாக வலைப்பதிவுகளில் படிப்பேன்.


4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?


மிகவும் சந்தோசமாக இருக்கு, நல்ல ஒரு நிகழ்வு ஆரம்பமாகி யிருக்கின்றது. இதன்மூலம் உலகத்தோரின் கவனத்துக்கு இதை கொன்டு செல்வதை நன்கு பயன் படுத்திக்கொள்ளனும்.


5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?
தனி நாடு என்பது சாத்தியாமா என்று எனக்கு தெரியலை.
கவலைப்படாதீர்கள் எமது தாய் உறவுகளே. உங்கள் இன்னகல் கேட்டு நாங்கள் மிகுந்த வேதனைகள் கொன்டுள்ளோம். கஷ்டங்கள் நீங்கி மீன்டும் சந்தோஷமான வாழ்கை துவங்கும் காலம் மிக அருகில் தான் உள்ளது. இன்னல்களை கொஞ்சம் தாங்கிக்கொள்ளூங்கள். நாங்கள் இருக்கும் வரை நீங்கள் கவலையே படாதீர்கள். சொந்தநாட்டில் இருப்பதுதான் சுகம் என்ற‌றிவேன், உங்கள் சொந்தநாட்டிலேயே உங்களுக்கு நல்ல காலம் நமது தலைவர் பிரபாகரன் மூலம் கிடைக்கும் நாள் அருகில்தான் உள்ளது. இருந்தாலும் சொல்லுகிறேன், நீங்கள் தமிழ்நாட்டுக்கு வாருங்கள் தாய்வீடு உங்களை அன்புடன் இங்கே வாழவைக்கும்

==================================================================
தளபதி கெர்னல் பானு அவர்களின் பேட்டியை குமுதத்தில் படித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. நீங்களும் படிக்கும் வன்னன் கீழே தந்துள்ளேன்.

விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவராக இருப்பவர் கேனல் பானு. புலிகளுக்காகப் பல களங்களைக் கண்டு, வெற்றிகளைக் குவித்தவர்.

இலங்கை ராணுவம், புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சி-யைப் பிடிக்க இப்போது இடையூறாக நின்று கொண்டிருப்பவர் தளபதி பானு. ஈழப்போர் முனையில் இருந்த அவரை மிகுந்த சிரமத்திற்குப் பின் நாம் பேட்டி கண்டோம். தமிழக இதழ் ஒன்றுக்கு அவர் அளிக்கும் முதல் பேட்டி இதுவே.

இலங்கைப் போரில் புலிகள் பின்-வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையா?

``நாங்கள் கூறினால் நம்பவா போகிறீர்கள்? பன்னாட்டு ஊடகவிய-லாளர்கள் எல்லாம் இங்கே வந்து பார்க்கட்டுமே. பார்த்தால் உண்மை தெரியும். இன்று வரை இலங்கை ராணுவம் எங்கள்மேல் போர் தொடுக்கவில்லை. அப்பாவி தமிழ்மக்கள் மீதுதான் தாக்குதல் நடாத்துகிறார்கள். சில இடங்களில் நாங்கள் தடுப்பு நடவடிக்கையில் இறங்குகிறோம். அவர்கள் பின்வாங்கி ஓடுகிறார்கள். இங்கே பாரிய (பெரிய) யுத்தம் நடப்பதாகக் கூறும் அவர்கள் வரைபடத்தை வைத்து அதை உறுதி செய்யட்டுமே.!''

தமிழ் மக்களை தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருமாறு இலங்கை அரசு அழைக்கிறதே? அதை தமிழ் மக்கள் ஏற்கிறார்களா?

``அப்படிப் போகத் துணியாமல்தான் அவர்கள் இங்கே அகதிகளாக இருக்கிறார்கள். ஏற்கெனவே மட்டக்களப்பு, அம்பாறை, திரிகோணமலை பகுதிகளில் ராணுவத்தை நம்பிச் சென்றவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியாதவர்களா நம் மக்கள்? அங்கே ராணுவச் சித்திரவதை தொடர்கிறது. ஒட்டுப்படைகள் (ராணுவத்துக்கு ஆதரவாக இயங்கும் தமிழ்க்குழுக்கள்) கையில் துவக்குகளோடு ஆள் கடத்தல், அழித்தொழிப்பு வேலைகளை ராணுவத்துடன் சேர்ந்து செய்கிறார்கள்.

அதனால்தான் வீடின்றி, உணவு, மருந்து கிடைக்காத நிலையிலும் தமிழ் மக்கள் கிளிநொச்சி நோக்கி நகர்கிறார்கள். அந்த மூன்றே முக்கால் லட்சம் மக்களும் யார்? 22 ஆயிரம் போராளிகளைப் பலி கொடுத்துள்ள குடும்பத்தினர்தானே? அதில் இருப்பது என் தாய், தந்தை, பிள்ளை, மாமன், மைத்துனன் தானே? அவர்கள் எப்படி அறுத்துக்கொண்டு போவார்கள்? அதனால்தான் இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியிலும் அவர்கள் இங்கேயே நிற்கிறார்கள்.''

`பிரபாகரன் சரணடைய வேண்டும். தன்னையும் இயக்கத்தவர்களையும் அவர் காப்பாற்றிக் கொள்ள இதுதான் கடைசி வாய்ப்பு' என்று மகிந்த ராஜபக்சே பேசியிருக்கிறாரே?

``இதைக் கேட்டு நாங்களும், எங்கட மக்களும் மட்டுமல்ல. சிங்கள ராணுவமே கூட சிரித்துக் கதைக்கிறது. ஒவ்வொரு அதிபருமே இப்படித்தான். பதவிக்கு வந்த மூன்றாண்டுகளுக்குள் பாரிய யுத்தம் ஒன்றை நடத்துவார்கள். அடிவாங்கி ஓடுவார்கள். தேர்தல் நெருங்கினால் `சமரசப் பேச்சு வார்த்தை, சமரசத் தீர்வு' என்பார்கள். தேர்தலில் வென்றால் மீண்டும் மூன்றாண்டுகளுக்கு சண்டை பிடிப்பார்கள். வாக்களித்த மக்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமே, அதற்காகத்தான் `இதோ நெருங்கிட்டோம். பிடிச்சிட்டோம். சரணடைங்க' என்கிறார்கள்.''

புலிகளை முற்றாக அழித்தொழிக்காமல் ஓயப் போவதில்லை. புலிகளின் நாட்கள் எண்ணப்-படுகின்றன என்கிறார்களே சிலர்?

``நாங்களே நினைத்தாலும் இனி இந்த இயக்கத்தை அழிக்க முடியாது. `சரி போதும்' என்று நாங்களே முடிவெடுத்தாலும் இனிமேல் இந்த இயக்கம் இலக்கை அடையாமல் ஓயாது. கரும்புலிகளின் எண்ணிக்கை நாளாந்தம் கூடுமே தவிர குறையாது. எமது இயக்கத்தின் பலம் ஆயுதமல்ல. மனஉறுதியும், உலகம் முழுவதும் வியாபித்துள்ள எங்கள் தமிழ் உறவுகளும்தான். அதனால் ராஜபக்சே அப்படிக் கதைக்கிறார் என்றால், அவர் கடைசிவரை கதைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.''

அமெரிக்கா, சீனா, கொரியா, இந்தியா போன்ற நாடுகளிடம் இருந்து பெருமளவில் இலங்கை அரசு ஆயுதம் வாங்கிக் குவிக்கிறதே? அதைச் சமாளிக்கும் அளவுக்கு உங்களிடம் ஆயுத பலம் இருக்கிறதா?

(சிரிக்கிறார்) ``அதுபற்றி எங்களுக்கு என்ன கவலை? அவர்கள்தான் பிரேமதாசா காலத்திலிருந்தே வெளிநாட்டில் இருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்கிறார்களே? அவர்கள் கஷ்டப்பட்டு வாங்கி பாதுகாப்பாகக் கொண்டு வந்து கடைசியில் எங்கட காலடியில் போட்டுவிட்டுத்தானே ஓடுவார்கள்? எங்களுக்கு எப்போதும் ஆயுதம் வாங்க வேண்டிய அவசியம் வந்ததே இல்லை. அவர்களது ஆயுதத்தைப் பிடுங்கித்தான் அவர்களை அடிக்கிறோம்.

ஆனையிறவு சண்டையில் அவர்களிடம் இருந்து 152 மி.மீ. ஆட்லரி பீரங்கியைப் பிடுங்கினோம். பிறகு 122 மி.மீ. பீரங்கி. அவற்றை வைத்துத்தான் அவர்களை அடிக்கிறோம். ஒவ்வொரு பீரங்கிக்கும் இதுவரை இரண்டாயிரம் பேர்வரை மடிந்திருப்பான்கள். இப்படிப் பறித்த ஆயுதம் நிறைய இருக்கிறது. வரட்டும் பார்க்கலாம்.''

தடுப்பு நடவடிக்கை முடிந்து எப்போது தான் நீங்கள் சண்டை பிடிப்பீர்கள்?

``சிங்கள ராணுவத்தின் கை ஓங்கி விட்டது என்பது பொய்ப்பிரசாரம். நாங்கள் தகுந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறோம். எங்கட தரப்பில் ஆயிரம் குண்டுகள் செலவானால் அவர்களிடமிருந்த பத்தாயிரம் குண்டுகளை நாங்கள் பறிக்க வேண்டும்.

இப்போது மழைக்காலத்துக்காகக் காத்திருக்கிறோம். பலத்த மழையில் அவர்களை அடித்தால்தான் சரிப்படும். தப்பி ஓடமுடியாமல் தண்ணீரில் விழுந்து அவர்கள் சாக வேணும். அதற்காகத்தான் காத்திருக்கிறோம். எவ்வளவு மழை வெள்ளம் எண்டாலும் நாங்கள் களத்தில் நிற்போம். எங்கள் பயிற்சி அப்படி.''

கடந்த ஒரு மாதத்தில் `கொத்துக் கொத்தாகப் புலிகள் பலி' என்ற செய்திகள்....?

``உண்மை ராஜபக்சேவுக்கே தெரியும். எங்கட தரப்பு வீரச்சாவுகளை நாங்கள் மறைக்க மாட்டோம். அவர்கள் கூறும் கணக்குப்படி பார்த்தால் எங்கள் ஒட்டுமொத்த எண்ணிக்கையையே தாண்டிவிடும் போலிருக்கிறது. ம். வேடிக்கைதான்.... ஸீ

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

பதிவிற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி சக்தி...

Known Stranger சொன்னது…

Just for curiosity came to your page . out of curiosity posting this comment. ( not sure if you guys accept comments in english - may be you are one of those tamil arvalargal)

I will answer to this question alone ( chuma oru time passukunu vechunga porupu illatha tamilana vena sollunga kavalai ellai.)

1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?

oru izha tamilaroda 8 masam sernthu iruntha anubavam, avaruku thani uthi koduthu avara pesa vitu keta anubavam, "Nantha" padam parka vechu parkum pothay avaruku mogam irandu azhugai vanthathai partha anubavam, action padam parkarapa thidirunu avar odambu thuki potu azhurtha partha anupavam, Indian peace force avar vayila AK 47 vechu onuku adika vecha anubavatha avar solla keta anubavam, avar eppadi naatta vitu thapi vanthu thanoda manaiviyavum, maganiyum kuti poga kashtapadratha avar kankalai parthu ketun unarntha anubavam, avar mullama avarudiya palla nanbargaludan ezha war patri nerediyaga keta anubavam... neeriya kelvi gyana anubavam iruku.

oru izhathu islamiya nanbaroda 11 masam thangi avar samaithu sapitu vallarntha anubavam... thangai matumvathu usuroda irukanu daily phone pani kekurapa pakathula ninukitu iruntha anubavam. athay nanbar eppadi srilankalernthu india vanthu india passport vangi india citizena agi india va vitu veli natula india citizena vazhara anubavathai nerla parthu therinchukita anubavam.. avan indian citizenavum avar thangai srilankan citizenagavum pirinchu vazhara vedhaniayoda solla keta anubavamnu neriya iruku..

19 masam nan pazhagiya elllangaai tamilargal ellorum sarasari pamaran arasiyal selvaku ellatha LTTE thodarpu ellatha ( i hope so ) oru satharna elangai tamilan.

neriya kelvi gyanam iruku ....anna intha blog worldla palla peru izha situation vechu entha anubavaum ellama thanoda karutha pathivu panratha nenachukitu panra alambal than manasuku romba khastama iruku.

Ithula ena kodumaina pathivu potu athula suda vaku vatham aramechu athu arasiyal nedi patu, enamoo foriegn policy fulla karachu kudichu thelivu udaya periya pandithar mathiri than sollra oru karuthuku justification koduthu suda nallu comment potu ena panna try panranganu yosikarapa mansula oru anthangam.. ena kodumaida ithelamnu... seri pathi potureenga seriokay..

I hear in blog community , bloggers join hands and do lot of responsiblt things.. i hear lot of singapore, malaysian , norway tamilians are in the group .. why not you people open up to share your one day salary and collect and find a proper way and leagal way to send your contribution ( NOT TO LTTE) but to RED cross / medical team etc.

Pesurenga ezhuthureenga... yen oru nalla kariyatha eduthu seiya mudiyalla . May be you guys are doing and i am not aware and i am mistaken . May be you guys and your group of bloggers are trying towards or may be executing the same. Insha allaha.. it is done as i believe.

chuma thodar podatheenga, chuma pesathinga.. pesi pesi ayachu .. etha seiyunga seiyanumnu manasu iruku ungaluku atha adutha leveluku eduthu ponga anna legala panunga ... formality kandupudinga...

Sollanumnu thonichu soliten.. May be you can moderate the comment to avoid publishing in your post. Nan enna kezhuchenu kepenga.. nan oru kaiyalagatha poramboka irunthutu poren.

I am posting the same comment in all the bloggers page where i see they joining hands in this chain tagging - not to gain publicity - just making my views registered as you trying to register your thoughts throgh the chain tagging. If you think i am doing a publicity - its okay can be judged so. no issues.