சனி, 31 ஜனவரி, 2009

தமிழ்நாட்டு தமிழர்களை ஒழிக்க இந்த உலகம் முற்ப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை

உங்களுக்கு என்ன தீர்வு என்று சொல்லமாட்டோம், எப்படிப்பட்ட வாழ்வுன்னு சொல்லமாட்டோம், எல்லோரும் முல்லைத்தீவைவிட்டு வெளியே வாருங்கள் உங்களையெல்லாம் தனிதனியாக சித்திரவதை , கற்பழிப்பு என்ற பெயரில் கொல்லுகிறோம். அப்படி இல்லையென்றால் குன்டுபோட்டு கொல்லுகிறோம் மொத்தமாக சாவுங்கள் என்று ஒர் கொடூரன் கொக்கரிக்கிறான், அவனை கேட்க்க ஒரு நாதியில்லை.
சே என்ன கருமம் பிடிச்ச உலகம் இது. தமிழர்களை திட்டம்போட்டு அழித்தொழிக்கும் நிகழ்ச்சிக்கு சொந்த விரோதங்களை எல்லாம் மூட்டைகட்டி வைத்துக்கொன்டு ஒற்றுமையாக செயல்படும் காங்கிரஸ், பிஜேபி.
தமிழர்களும் இந்தியர்கள்தானே அவர்களின் உறவுகள்தானே ஈழத்திலும் இருக்கிறார்கள் அவர்களுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை சொன்னல் குடுமுழுகிப்போய்விடு என்று ஆந்திரா, கர்னாடகா, கேரளவாசிகள் மற்றும் வட இந்தியர்கள்.
எனது ஆந்திர நன்பர் சொன்னார், பிரபாகரன் இந்திய, இலங்கை, சிங்கப்பூர் மலேசிய தமிழர்களை எல்லாம் ஒன்றினைத்து அவர்கள் வாழும் அந்த அந்த நாட்டு பகுதிகளை தனி நாடாகெ பிரித்து அனைத்துக்கும் தலைவனாகனும்ம்னு சொல்லியிருக்கிறாராமேன்னு கேட்டார்.
அடப்பாவிகளா இப்படியா திட்டம்போட்டு கதைபரப்புவீகள். தமிழன் என்றான் ஏன் இத்துனை கசப்பு ஊடகங்களுக்கும்?

அதையும் மீறி உணர்வை காட்ட முத்துக்குமரன் வேன்டியிருக்கு.
முத்துக்குமரா, உன் சாவைக்கூட தமிழர் தவிர எல்லோரும் கேவலமாக பேசுறாங்கப்பா, ஈழத்தமிழர்கள் மீது கரிசனமாக இருக்கின்றோம் ந்னு சொன்னாக்கூட பிடிச்சி உள்ள போடுறாங்க, அதையும் செய்தியாகூட காட்ட மாடேங்குறாங்க. எங்கடா ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு இருக்குறது வெளிய தெரியகூடாதுன்னு பDகறுறாங்க, அதையெல்லாம் மீறீ ஆதரவைக்காட்டனும், தமிழ் உணர்வுகளை தட்டிஎழுப்பனும், நமது எண்ணங்கல் கடிதத்தின் வாயிலாக உலகம் பரவனும்ன்னு செஞ்ச காரியம், உன்மையில் மகத்தானது. விடுதலைப்போராட்ட வீரங்களுக்கு சற்றும் குறைவில்லாதது. நீ வாழ்க , உனது வீரம் இவ்வுலகில் தமிழர்கள் உள்ள வரை அவர்கள் தம் நெஞ்சங்களில் இருக்கும்.

ஒரு பிரபாகரன் உருவாக்கபட்டதன் காரணத்தயே மறந்து மீன்டும் மீன்டும் ஓராயிரம் பிரபாகரன் களை உருவாக்காமல் விடமாட்டார்கள் இவர்கள்.

தமிழர் விரோத ஊடகங்கள்தான் இப்படிச்செய்கின்றன என்றால், தினகரன் கூட இப்படி செய்கிறதே. கலைஞரை நம்மி பிரயோசனமே இல்லை, யார் மீதும் நம்பிக்கை இல்லை. இலங்கைக்கொடூரன் அறிவித்த இரண்டு நாள் தவனை முடிந்துவிட்டது, என்ன ஆகுமோன்னு துக்கம் தொன்டையை அடைக்குது.
தமிழர்களுக்கு இதையெல்லாம் செய்கிறேன், இதுக்கு பிரனாப்முகர்ஜி, சோனியா, தங்கபாலு,பெரியாரின் பேரன் இளங்கோவன் இவர்கள் எல்லாம் சாட்சின்னு அந்த இலஙைக்கொடூரன் சொல்லட்டும், பார்க்கலாம். அப்படி தமிழர்கள் நலன் உறுதி செய்யப்படும் பட்சத்தில், புலிகள் ஏனப்பா ஆயுதத்தை தூக்கப்போகிறார்கள்? அந்னேரத்தில் என் தலைவன் பிரபாகரன் இன்முகத்தோடு தன்னுயிரைத்தருவான்.

எனது முந்தைய பதிவில் சொன்னதுபோல தமிழ்நாட்டு தமிழர்களை ஒழிக்க இந்த உலகம் முற்ப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.newspaanai.com/easylink.php