செவ்வாய், 27 ஜனவரி, 2009

மயானமாகிப்போகும் கிழக்குமாசி வீதிகளும் ரங்கநாதன் தெருக்களும்

தினமும் நெருடல், புதினம், தினக்குரல், தமிலிஷ் மற்றும் தமிழ்மணம் இனைத்தளங்களை பார்த்து பார்த்து ஏங்கி ஏங்கி இன்று ஏதாவது நல்ல மகிழ்சியான செய்தி வராதா என்று ஏமாந்து போயிக்கொன்டே இருக்கின்றேன். மனது கன‌க்கின்றது. ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க இவ்வுலகத்தில் எவருமே இல்லை.
சோனியாவின் கல் மனது கரையவே கரையாது போல இருக்கு. கலைஞர் ஏன் இப்படி வழ வழா கொழ கொழாவாகிப்போனார் என்றே தெரியலை. எத்துனை வருடம் ஆட்சியில் இல்லாமல் இருந்திருக்கின்றார், தமிழர்களிக்காக ஆட்சியை துறந்தால்தான் என்ன?
இல்லை விடுதலைப்புலிகள் மற்றும் ஈழத்தமிழர்கள்மீது இந்த தவறுகள் எல்லாம் உள்ளன, அதனால் நான் இதையெல்லாம் செய்யமுடியாத சூழ்நிலையில் இருக்கின்றேன் என்றாவது சொல்லலாமே?
சந்தோஷம் பிடுங்கப்பட்டு, வசந்தத்தை தொலைத்துவிட்டு வெறுமையில் இருக்கும் ஈழத்தமிழர்களின் நிலை தமிழ்நாட்டுக்கும் வரும் காலம் தொலைவில் இல்லையென்றே எனக்கு தோன்றுகின்றது. கிழக்குமாசி வீதிகளும், ரங்கநாதன் தெருக்களும் புல் பூன்டு நிறைந்த காடாகும் காட்சி என் கண்களுக்கு தெரிகின்றது. அப்பொழுதும் இருப்பதைவைத்துக்கொன்டு உயிர்வாழந்தால் போதுமென்று ஒட்டிக்கொன்டிருக்கும் தமிழர்களை க்கன்டு இந்த உலகமே சந்தோஷமாக இருக்கும் காட்சியும் எனக்கு தெரிகின்றது.
வாழ்க உலகம்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

:(