புதன், 20 மே, 2009

சீமான் களுக்கும், தாமரைகளுக்கும் வைக்கோக்களுக்கும் ஒரு கடிதம்

சீமான் களுக்கும், தாமரைகளுக்கும்.
நலத்தை, வளத்தை, சுற்றத்தை மற்றும் உற்றத்தை தொலைத்த நமது தமிழ் உறவுகளின் பால் நீங்கள் கொன்டுள்ள வருத்தம் வேதனை அப்பட்டமாக தெரிகின்றது. உங்க‌ளது உள்ளக்கிடக்கையின் குமுற‌ல்கள் உணர்ச்சி பிரவாகமெடுத்து வெடித்து வெளிவருவதிலிருந்தே தெரிகின்றது எந்த அளவுக்கு உள்ளுக்குள் அழுதிருப்பீர்கள் என்று. கவலைப்படாதீர்கள் உறவுகளே, என்ன செய்வது மனிதர்களாகப்பிறந்துவிட்டோம் போட்டி நிறைந்த உலகில் உணர்ச்சியை வெளிக்காட்டுவது கூட தோல்வியாக பாவிக்கப்படுவதால் மனிதன் இயல்பான உணர்ச்சியைகூட வெளிக்காட்டாமல் விலங்குக்கும் கேவலாமாக மாறிக்கொன்டு வருகின்றான்.
உங்களைப்போலத்தான் நானும், ஒடுக்கப்படும் மக்களை நினைத்தால் நொறுங்கிப்போய்விடுகின்றேன். நமது உணர்ச்சிகள் எல்லாம் நியாயமான‌துதான் ஆனால் அதனால் என்ன விளைச்சல் கான முடியும் என்று நினைக்கின்றீர்கள்?
1). இப்படி மக்கள் அழிக்கப்படும் விவரம் தெரியாத மக்கள் தெரிந்த்துகொள்வார்கள்
2). உங்களுக்கு உணர்ச்சிகளை வடித்துவிட்ட திருப்தி இருக்கும்

இதைத்தவிற வேறொன்றும் இல்லை. உங்களுக்கான திருப்தியை விடுங்கள் விவரத்தினை தெரிந்துகொன்ட மக்கள் என்ன செய்வார்கள் என்று நினைக்கின்றீர்கள்? அட அப்படியா என்று சொல்லிவிட்டு போய்க்கொன்டே இருப்பார்கள். நான் நன்றாக கவனித்துப்பார்த்ததில் தமிழர்களில்

1). அரசியல் தொழில் செய்பவர்கள் ஐய்யோ ஐய்யோ இப்படி பன்னுறாங்களே, இதுக்கு காரனம் இவந்தான் என்று நிருபிப்பதில்தான் கவங்கொள்கின்றனர்.

2). மிகச்சிறிய, சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவில், சொந்தத்தொழில் செய்யும் மறத்தமிழர்கள்கூட ஒருவித முதலாளி மனப்பான்மையுடன், எதுக்கு தனி நாடு கேக்கனும்? சிறுபான்மையா இருந்தா அடங்கிப்போக வேன்டியதுதான, அப்படி என்னகொழுப்பு அவிங்களுக்குன்னு நெனக்கிறாங்க.

3). வேலைசெய்பவர்கள் உன்மையில் ஒடுக்கப்படும் தமிழர்களின் வலிகளைப்புரிந்து கொன்டு வருத்தப்படுகின்றனர் அவ்வளவுதான்.

4). பொருளீட்டும் பொருட்டு, மற்றும் அடைக்கலம்தேடி புலம்பெயர்ந்த அனைவருமே வேதனை மற்றும் துன்பத்தில் தவித்து ஊர்வலம் சென்று இயலாமையால் நொறுங்கிப்போகின்றார்கள்

5) சீமான்களும், தாமரைகளும் சாப்பிடமுடியாமல், தூங்கமுடியாமல், துக்கம் வாட்ட,. நமக்குமட்டும்தான் தமிழுறவுகளைப்பற்றிய அருமை தெரிந்திருக்கு, சரி இதை எல்லோருக்கும் சொல்லி, ஒரு எழுச்சியை உண்டாக்கி அதன்மூலம் ஒடுக்கப்படும் தமிழர்களை காப்பாற்றலாம் என்று மாய்ந்து மாய்ந்து கத்தி எமாந்துபோகிறார்கள்.

ஆகவே கஷ்ட்டப்படுபவர்களின் நிலை அப்படியேத்தான் இருக்கு. உன்மையில் நீங்கள் செய்யவேன்டியது, வாழ்க்கையென்றால் என்ன என்று தெரியாதவர்களுக்கு மனித வாழ்க்கையைப்பற்றிய அறிவை போதிப்பதுதான், சரியான தீர்வு.
மனக்கவலைகளை விட்டொழியுங்கள், உலகம்முழுவதிலும் மக்கள் எங்காவது அடக்கப்பட்டுக்கொன்டேதான் இருக்கின்றார்கள். அடக்கப்படுபவர்களும் சரி விதிதான் இப்படி நம்மைபடைத்துவிட்டதுன்னு அடங்கிபோய்விடுகிறார்கள். கஷ்ட்டத்திலேயே ஊறிய அவர்களுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல, குச்சியால் அடித்தால் உடம்பை இறுக்கிக்கொள்வர், தடியாலடித்தாலும் அப்படியே, அவர்களை சிங்கம் அடித்து கொல்லும்போதும் அதே வெளிப்பட்டினைத்தான் கான்பிப்பார்கள்.
ஆனால் பார்க்கும் நமக்குத்தான் ஐய்யோ ஐய்யோ இப்படி இருக்காங்களேன்னு மனசும் உயிரும் அடித்துக்கொள்ளும். இதை உணர்ந்த்துகொள்ள முயர்ச்சிசெய்யுங்கள்.

இப்படி செய்கிறார்களே, செய்கிறாகளேன்னு கத்தி கதறுவதைவிட, வாழ்க்கையைத்தொலைத்த ஒருத்தரிடம், ஒரே ஒருத்தரிடம், அவ்ர் எதைத்தொலைத்திருக்கின்றார், அவரது வாழ்வுரிமைகள் என்ன, கடமை என்ன அதைஎப்படிச்செய்வதுன்னு சொல்லி செய்யவைத்துப்பருங்கள் உங்களுக்கு என்ன்படி ஒரு நிறைவு வரும் என்று. அதன்பிறகு அந்த மனநிறைவே உங்களைஅடுத்தடுத்த பாதைகளுக்கு இட்டுச்செல்லும்.

சொந்தங்கள் சாகடிக்கப்ப்ட்டுவிட்டார்கள், வஞ்சிக்கப்பட்டுவிட்டார்கள், அவர்களை காப்பாற்றியவர்கள் அழிக்கப்பட்டுவிட்டார்களே என்று நினைத்து நினைத்து வெம்பிப்போவதைவிட சரி, அவர்கள் கடமையை செய்துவிட்டார்கள், வாழ்வுக்கு ஒரு வழியையும் காட்டிவிட்டார்கள், அவர்கள் செய்தது மகாத்தானது, தமிழர் வரலாற்றில் இடம்பிடித்துவிட்டதுன்னு சமாதானம் ஆகுங்கள். எதிரிகளை நமது வாழ்வின் வெற்றிமூலம் தோற்க்கடிப்போம்.

சீமான்கள் ஆசைப்படும் தமிழர்களுக்கான நாட்டை, வெற்றிகரமான வாழ்வின்மூலம், சொந்த்தமாக விலைக்கு வாங்கும் நிலைக்கு வருவோம்.

நீரோடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழைகாலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்
நம் தோள் வலியால் அந்த நாள் வரலாம்
அன்று ஏழை எளியவர்கள் நலம் பெறலாம்
முன்னேற்றம் என்பதெல்லாம் உழைப்பவர் உழைப்பதனாலே
கடமைகளை புரிவதெல்லாம் விடுதலை வேண்டுவதாலே
================================================================================================

ஐய்யா நெடுமாறன்களே, வைக்கோக்களே, ராமதாசுக்களே, கோபால்களே போதுமைய்யா உங்க‌ள் தமிழர்கள் கரிசனம். ஆ ஊ அவந்தான் இல்லை இவந்தான், இப்படி இல்லை அப்படி, கை வைத்துப்பார்ன்னு கூப்படுபோட்டெ பொழப்பை ஓட்டுறீங்களே.
புலிகள் உலகிற்கே ஒரு எடுத்துக்காட்டாக இருக்கின்றனர், தமிழர்களை காக்க, என்னென்னவோ தியாகங்கள் செய்து செய்து மிகவும் ஒரு இக்கட்டான நிலையில் வந்திருக்கின்றனர். அவர்களை அலைக்கழித்தது போதும், தியாகத்தின் திரு உருவங்களை கேவலப்படுத்தும் செயல்களை விட்டுவிடுங்கள். புலிகள் 3000 பேர் வெளியேறி பரவியிருக்கின்றனர் அவர்கள் என்னமோ செய்துவிடுவார்கள் என்று ஏன் கூப்படு போடுகிறீர்கள்? அவர்கள்தான் யாருக்கும் தெரியாமல் செய்கிறார்களே அப்புறம் ஏன் இப்படி கத்தி கத்தி சொல்லுகிறீர்கள்? புலிகள் மௌனமாகிவிட்டால் உங்களால் அரசியல் வியாபாரம் செய்யமுடியாதுன்னு பரபரத்து பயப்புடுறீங்களா? போதுமைய்யா போதும். அவர்களை அவர்கள் நோக்கில் விட்டுவிடுங்கள். உங்கள் வியாபார உத்திகளை தியாகக்கடவுள்களிடம் காட்டாதீர்கள்.
நன்றி.

3 கருத்துகள்:

Karthi சொன்னது…

தம்பி அவங்களாவது உருப்படியா கூப்பாடு போடுறாங்க... நீங்க இதுவரை என்ன செய்து இருக்கீங்கன்னு சொல்லுங்களேன்.

பெயரில்லா சொன்னது…

ஐயா நெடுமாறனை இதில் சேர்க்கவேண்டாம். ஜெயாவை விட்டது எதற்காக?

சக்திவேல் சொன்னது…

/////*
Karthi கூறியது...
தம்பி அவங்களாவது உருப்படியா கூப்பாடு போடுறாங்க... நீங்க இதுவரை என்ன செய்து இருக்கீங்கன்னு சொல்லுங்களேன்.
*////
ஐய்யா
நமது சொந்தங்கள் நசுக்கப்படுகிறார்கள், அவர்களது பாதுகாவலர்களான புலிகளுக்கு ஆதரவில்லை என்று
சொல்லி ஆதரவு கேட்பதையா செய்கிறார்கள் இந்த வியாபாரிகள்.
புலிகள் பரவியிருக்கிறார்கள், கவலைப்படாதீர்கள், வெடிகுன்டுதாக்குதநடத்தி இலங்கையை அதிர வைக்கப்போகிறார்கள், ரத்த ஆறுஓடும் என்று சொல்லுவது ஏன்? நக்கீரன் என்ற வியாபாரி விடுதலைப்புலிகளை வைத்து நடாத்தும் வியாபார உத்தி மகாக்கேவலமானது.