புதன், 27 மே, 2009

இலங்கைத்தமிழர்கள் கதி அதோ கதிதான்

இலங்கைத்தமிழர்கள் கதி அதோ கதிதான் போல இருக்கு. ஐக்கிய நாடுகள் சந்திப்பில் இலங்கை ஒரு உத்தமமான நாடு என்றும், நடுநிலையாளர்கள் யாரும் அங்குள்ள மக்களை சென்று பார்வையிடக்கூடாதுன்னு இந்தியா உட்பட 28 நாடுகள் சொல்லியிருக்கின்றன. அமெரிக்கா ஏதோ செய்மதிப்படங்கள் எடுத்தனர் அதை வைத்து இலங்கை அரசை குற்றவாளிக்கூன்டில் ஏற்றப்போகின்றன என்று என்னன்னமோ சொன்னார்களே என்ன ஆச்சுன்னு தெரியலை. சும்மாவே நாயாட்டம் ஆடும் அந்த இலங்கை மரனக்கொடூரன் இனிமேல் பேயாட்டம் ஆடுவானே!. பாவம் கிழக்கு மற்றும் கொழும்பு வாழ் தமிழர்கள் என்ன கதியாகப்போகிறார்களோ.

ஆஸ்திரேலியா மற்றும் அன்டை நாடுகளுக்கு அகதிகளாக போகும் இலங்கை தமிழர்களை அந்த நாடுகளுக்குள் விடாதீர்கள், எங்கள் நாடுக்குள்ளேயே வைத்து அவர்களை கொல்லுகிறொம்ன்னு சொல்லுறான் கோத்தாபய.

இந்தியா ஏன் இப்படி மகா மட்டமாக நடந்துக்குதோ? சரி ராஜீவ் காந்தியை கொன்னதுக்கு பதிலா லட்சம் தமிழர்களையும், தலைவர்களையும் கொன்னாஅச்சே அதன் பிறகும் வெறி அடங்கலையா?

தமிழ்நாட்டு மீனவர்களையே கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு இப்படி ஓடி ஓடி உதவி செய்யுறாங்களே. இந்தியா ஒரு சோப்ளாங்கி நாடுன்னு நினைக்குறேன். ஏதாவது செய்யபோய், ராஜபக்ஷே ஏதாவது கோவமாக பேசிவிட்டால் இந்தியாவால் ஒன்னுமே சொல்ல முடியாது அவமானமாக போய்விடும் அதனால்தான் இப்படி வழி வழின்னு வழிந்துகொன்டு உதவுறாங்க போல.

பாக்கிஸ்தான் இந்தியாவின் தலைப்பகுதியை சுத்தமாக பிடிச்சுகிடுச்சு அதை ஒன்னும் செய்ய முடியலை, சீனா அருனாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட பல பகுதிகளை பிடிச்சிருக்கு அதை கேட்க்க துப்பில்லை. இப்படிஒரு கேவலப்பட்ட பிழைப்புக்கு நான்டுக்கிட்டு சாகலாம்.
நான் இந்தியன்னு சொல்லிக்கவே வெக்கமாயிருக்கு. சரி நன்பர்களே சென்னையில் இருக்கும் எனது வீட்டில் ஒரு பதுங்கு குழி வெட்டனும், அதுக்கு தேவை சீக்கிறம் வரும்போல இருக்கு.

கருத்துகள் இல்லை: