சனி, 23 மே, 2009

மக்களே மனதைக்கல்லாக்கிக்கொள்ளுங்கள். மாபெரும் மனிதப்பேரவலம் நடந்திருக்கின்றது

உலக தமிழ் உறவுகளே,
நான் பல்வேறு காலகட்டத்தில், பல்வேறு மக்களை சந்தித்து, உற்றங்கள் சுற்றங்களிடம் அலாவளாவி, நிறைய புத்தகங்கள் படித்து, நிறைய சினிமாக்கள்பார்த்து, மனித மணங்களை ஆராய்ந்திருக்கின்றேன். வணிகவியல் மாணவனான நான் மனித மனக்கலையில்மிகுந்த ஈர்ப்பும் ஈடுபாடும் கொன்டவன். என்னை செம்மைப்படுத்தியதில் சினிமா பெரும்பங்கு வகிக்கின்றது. ஆம் சினிமாவால் செம்மையானேன்.

எனது மனக்கணக்கின்படி இலங்கையில் மாபெரும் மனிதப்பேரவலம் நடந்திருக்கின்றது. கல்லும் கதறிஅழக்கூடிய மாபெரும் சோகச்சம்பவம் நடந்திருக்கின்றது. ஈழத்தமிழர்களுக்கும் , அவர்களின் பாதுகாப்பு அரணாக இருந்த விடுதலைப்புலிகளின் தலைமைகளுக்கும், உலகமகா துரோகம், வஞ்சகமிழைக்கப்பட்டு இருக்கின்றது.

மக்களே மனதைக்கல்லாக்கிக்கொள்ளுங்கள், இச்சம்பவம் விரைவில் வெளிக்கொனரப்படும் என்று நம்புகிறேன். அது எந்த ஒரு கற்பனையிலும், கடந்த வரலாறுகளிலும் பேச்சுக்களிளும், கதைகளிலும் சினிமாக்களிலும் இல்லாத சோகமாக இருக்கும்.

மனிதத்தன்மை என்பது யாதெனில் தமிழர்களிடம் காட்டப்படாதது.

2 கருத்துகள்:

கலையரசன் சொன்னது…

என்ன நடந்தது, சீக்கிரம் சொல்லுங்கள்..

சக்திவேல் சொன்னது…

என்னவென்று முழுமையாக தெரியவில்லை நன்பரே இது எனது கணக்கீடுதான். நடந்த நிகழ்வுகளைன் காரணத்தை ஆராய்ந்து பார்த்ததில் எனக்கு இந்த சோகச்சம்பவம் புலனாகியது.